tamilnadu

img

கொரோனா மூன்று வார ஊரடங்கு ஒரு தொடக்கப் புள்ளியே

தொற்றுநோயியல் நிபுணர் ராஜீவ் வெங்கய்யா பேட்டி

வாஷிங்டன், ஏப்.13- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மூன்று வார ஊரடங்கு ஒரு நியாயமான தொடக்க புள்ளியாகும் இந்திய-அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் ராஜீவ் வெங்கய்யா தெரிவித்துள்ளார் பிரபல இந்திய-அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் ராஜீவ் வெங்கய்யா. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் நிர்வாகத்தின் போது வெள்ளை மாளிகையில் பயோ டிபென்ஸ்(Biodefense) பிரிவில் ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளராக ராஜீவ் வெங்கய்யா பணியாற்றினார். தற்போது டக்கேடாவின் (Takeda) மருந்து நிறுவனத்தின் உலகளாவிய தடுப்பூசி வணிக பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார்.

ராஜீவ் வெங்கய்யா கூறியதாவது:- கடந்த மார்ச் 24-ஆம் தேதி கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா போன்ற ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மூன்று வார ஊரடங்கு போதுமானதாக இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. இன்னும் அதிக காலம் கூட தேவைப்படலாம். மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

 கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில், மக்கள்தொகை, சுகாதாரத் திறன், சீரான தன்மை அல்லது சீரற்ற தன்மை என்பது தவிர்க்க முடியாதது. பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அவற்றிற்கு சுயாட்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா போன்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டுமென யோசிக்க வேண்டும். மூன்று வார கால ஊரடங்கு என்பது ஒரு தொடக்கப்புள்ளியாகும்.