tamilnadu

உலகச் செய்திகள்

சவூதி அரேபியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை ஏமன் படையினர் சுட்டு வீழ்த்தியி ருக்கிறார்கள். ஏமனின் ஹஜ்ஜா மாகாணத்திற்குள் ஊடுருவி வான்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த இந்த ஆளில்லா விமானம் போர் ரீதியான நடவடிக்கை களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்டதால் தாக்கப் பட்டது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் பக்கம் நின்று ஏமன் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமைப்புகளிலிருந்து பலர் விலகியுள்ளதாகத் தகவல் கள் வெளியாகியுள்ளன.

மொசாம்பிக் நாட்டின் 30 அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்த 30 பேரும் ஏற்கனவே முதல் சுற்றுப் பயிற்சியை நிறைவு செய்த வர்களாவர். மொசாம்பிக்கின் வட பகுதிகளில் சிறு வர்களை போர்ப் பயிற்சியில் ஈடுபடச் செய்யும் முயற்சி கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலிருந்து சிறு வர்களைத் தடுப்பதற்கான பயிற்சிகள் இந்த அதி காரிகளுக்கு தரப்பட்டுள்ளன. ஐ.நா.சபையின் அமைப்பான யுனிசெப் சார்பில் இந்தப் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

சீன மொழி ஒரு விருப்பப்பாடமாக கியூபாவில்  கற்றுத் தரப்படுகிறது. எனது வருங்காலத்திற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன என்று அந்த மொழி யைக் கற்றுக் கொண்டுள்ள சாமுவேல் சயஸ் கூறு கிறார். மேலும் இது பற்றிக் கூறிய அவர், சீனா சர்வதேச அளவில் ஒரு முக்கியமான பொருளாதார சக்தியாக  இருக்கிறது. மொழியைக் கற்பது முதலில் சிரமமா கத்தான் இருந்தது. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதாக உணர்கிறேன் என்கிறார். பள்ளிப் படிப்பின் நிறைவுப் பகுதியில் இந்த விருப் பப்பாடத்தை கியூபா சேர்த்திருக்கிறது.