tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லாரி மோதி விபத்து

நாமக்கல், ஏப். 7 – பள்ளிபாளையம் அருகே லாரி ஒன்று விபத்துக்குள் ளானது. இதில் இருந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மது போதையில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி பாரத்துடன் சென்ற  கனரக லாரி ஒன்று ஞாயிறன்று மாலை ஒட்டமெத்தை பகுதி யில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை யோரத்தில் இருந்த ஜெராக்ஸ் கடைக்கு முன்பாக மின் கம்பத் தில் மோதியது. திடீரென லாரி நிலைதடுமாறி நிற்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். லாரியில் இருந்த முருகன் மற்றும் பாபு இருவரையும் கீழே  இறக்கி விசாரித்தபோது, அவர்கள் மதுபோதையில் முன்னுக் குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர், “குடிபோதையில் லாரியை வேகமாக ஓட்டி பொதுமக்களைக் கொல்ல  பார்க்கிறீர்களா?” என்று கூறி இருவரையும் தாக்கத்  தொடங்கினர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து,  பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மது போதையில் இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒட்ட மெத்தை சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த தால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

 கோவை, ஏப். 7 – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று  காலை மனுக்கள் பெறும் நேரத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு  கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட துறைவாரியான அதிகாரிகள் பங்கேற்ற னர். இந்நிலையில், ஒரு பெண் அலுவலக வளாகத்தில் உள்ள  மனு வழங்கும் பகுதியை நோக்கி சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப் போது காவலுக்கு நின்றிருந்த பெண் காவல்துறையினர் சுதா ரித்து தண்ணீர் ஊற்றி தடுத்தனர். விசாரணையில் அந்தப் பெண் பொள்ளாச்சி, கரட்டுப்பாளையம் சமத்துவ நகரை சேர்ந்த நந்தினி எனவும், அரசு பேருந்து நடத்துநரான தனது  கணவர் விவாகரத்துக்கு முயற்சி செய்து வருவதாகவும், இத னால் மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்ததாக தெரி வித்துள்ளார். 

கம்பி வேலி மூலம் மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி மூவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மோகனூர் தாலுக்கா ஆண்டபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூவர் – பாட்டி, பேரன், பேத்தி உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மோகனூர் தாலுக்கா ஆண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல் வம் (60), தனது நண்பர் மணி என்பவரின்  2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து,  அதில் பருத்தி மற்றும் சோளம் பயி ரிட்டு வந்தார். கடந்த திங்களன்று காலை, தனது மனைவி இளஞ்சியம் (50), பேரன் சுஜித் (5), மற்றும் பேத்தி  ஐவிழி (3) ஆகியோருடன் செல்வம் தோட்டத்திற்கு சென்றார். மாலை 3 மணி யளவில், பாட்டி இளஞ்சியம், பேரன், மற்றும் பேத்தி ஆகியோர் வீடு திரும்பும்  நேரத்தில், தோட்ட எல்லையில் அமைந் திருந்த கம்பி வேலியில் மின்கம்பத்தி லிருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதில்,  அப்பாதையில் சென்ற மூவரும் மின்சா ரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து மோகனூர் போலீசார்,  மூவரது உடல்களையும் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சா ரம் தாக்கி, ஒரே குடும்பத்தில் மூவர்  உயிரிழந்த நிகழ்வு, அந்தப் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவ நாள் உறுதிமொழி நிகழ்வை முன்கூட்டியே நடத்துக 

உலகமாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் ஏற்கப்படும் உறுதிமொழியை, தொடர் விடுமுறை நாட்களில் உள்ளதால் முன்கூட்டியே உறுதியேற்பு நிகழ்வுகளை நடத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கோவை பீளமேடு, காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா பழணிச்சாமி என்பவர் திங்களன்று ஆட்சியரிடம் அளித்த மனுவில், வருகின்ற ஏம் 14 ஆம் தேதி உலகமாமேதை அண்ணல் டாக்டர். பி. ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை தமிழக அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட நாளில் விடுமுறை நாள் என்பதாலும், அதற்கு முந்தைய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், ஏப்.11 ஆம்தேதியே அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கோவை மாநகரத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. சட்டமேதை அம்பேத்கருக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளார்.