tamilnadu

img

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெறுக!

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெறுக!

முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 26 - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப  பெற வேண்டும் என்று முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறி ஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக திரும்பப்  பெற வேண்டும் என முன்னாள் நீதியரசர்‌ து.அரிபரந்தாமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.  உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து புகார் தெரி வித்து கடிதம் அனுப்பி உள்ள நிலையில்,  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது, நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். தற்போது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு  அமைப்புகளின் பிரதிநிதிகள் சனிக் கிழமை அன்று மதுரை கே.கே. நகரில் உள்ள கிருஷ்ணர் சமுதாயக் கூடத்தில் கூடி  ஆலோசனை நடத்தினர்.  இந்தக் கூட்டத்தில் முன்னாள் நீதியர சர் து.அரிபரந்தாமன், வழக்கறிஞர் ஹென்றி திபேன், பேராசிரியர் முரளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரிபரந்தாமன் கூறியதாவது:  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இது  தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்சனை அல்ல. இது ஒட்டுமொத்த சாதாரண ஒவ்வொரு மனிதருக்குமான பிரச்சனை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார்  மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக  வலைதளத்தில் வெளியானால் அதற்கு  புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக  முடியும்? ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.  புகாருக்கு உள்ளானவரே விசாரிப்பதா? ஜி.ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு  புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு  அனுமதிப்பது? பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி கோகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்த போது நாடு முழுவதும் கண்டனம்  எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்யக்கூடாது. அவ்வாறு அவர் செய்தால் தலைமை நீதி பதி தலையீடு செய்து இதனை தடுக்க வேண்டும். இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதி பதி சுவாமிநாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும்.  நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட் டங்களை மேற்கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான். அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியு றுத்தி போராடியதும் தமிழ்நாடு தான். குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின்  வாங்கினால் கூட வழக்கறிஞர்கள் இதனை  விடுவதாக இல்லை. இவ்வாறு கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள், சமூக  ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கண்காணிப்ப கம், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரத்தில் நீதி கிடைக்க முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.