கரூர்,பிப்.19- கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி அத்திப்பாளையத்தில் வனவிலங்கு நட மாட்டம் உள்ளதாக அறியப்பட்டதால் அந்த வனவிலங்கை பிடிப்பதற்காக கூண்டுகள் அமைத்து வனத்துறையும் மாவட்ட நிர்வாக மும் முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஆட்சி யர் த.பிரபு சங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப் பாளையம் புதூர் பகுதியில் .நாச்சிமுத்து என்பவ ரது ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு இறந்த நிலையி லும், ஒரு ஆடு கடிபட்டு காயமுற்ற நிலையிலும் இருந்தது. அது குறித்த தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் அடிப்படையில் ஆடு கடி பட்ட இடம் மற்றும் அருகாமையில் பதிந்துள்ள வனவிலங்கின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது அது சிறுத்தையாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அதை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட கால் தடமும் தற்போது இங்கு எடுக்கப்பட்ட கால் தடமும் பெருமளவு ஒற்றுமையாக உள்ளதால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து இங்கு வந்தி ருக்கலாம். சிறுத்தையைப் பிடிப்பதற்காக நான்கு கூண்டுகள், மூன்று வலைகள் மற்றும் வனத்துறை அதிவிரைவு படையினர் கொடைக்கானலில் இருந்து வந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத் தைக் கண்காணிப்பதற்காக இரவு நேரங்களி லும் நன்றாக பதிவாகக் கூடிய வகையில் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாலை நேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளி யில் வர வேண்டாம். வருவதாக இருந்தால் இரண்டு மூன்று பேராக சேர்ந்து கையில் கம்பு மற்றும் கை விளக்குடன் வரவேண்டும்என்றார்.