உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட மதிப்பின் பணமாக்கலே செல்வம். இந்த மதிப்பை உருவாக்கியவர்களுக்கு முதலில் மரியாதை செலுத்துங்கள். நவீன தாராளமய சீர்திருத்த காலக்கட்டம் முழுவதும் ஏழ்மை, வறுமை, பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றை தீவிரப்படுத்தி, உற்பத்திப் பொருட்களுக்கான உள்நாட்டு கிராக்கியை கடுமையாகக் குறைத்தே லாபங்களை அதிகரிப்பதில் ஒருமுகப்பட்டுள்ளன. 2014க்குப் பிறகு தோன்றியிருப்பது, கார்ப்பரேட்- மதவெறி சங்கமம் என்ற கொடுமையான கலவை. இது தேசிய சொத்துக்களைக் கொள்ளையடித்து, பொதுத்துறை, பொது வசதிகள் மற்றும் கனிமவளங்களை பரந்தளவில் தனியார்மயமாக்குவதன் மூலம் லாப அதிகரிப்பை வலுப்படுத்துகிறது.