tamilnadu

img

மக்கள் பிரச்சனைகளை மட்டுமல்ல; மாற்றுக் கொள்கைகளையும் முன்வைத்தோம்!

மக்கள் பிரச்சனைகளை மட்டுமல்ல;  மாற்றுக் கொள்கைகளையும் முன்வைத்தோம்!

சென்னை, ஜூன் 21- விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறி னார். கட்சியின் மாபெரும் கிளர்ச்சிப் பிரச்சார இயக்கத்தின் நிறைவாக ஜூன் 20 அன்று சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்துவதற்கான மாற்றுக் கொள்கை களையும் முன்வைத்தார். விலைவாசி கட்டுப்பாட்டுக்கான தீர்வுகள் “இந்த பிரச்சாரத்தில் எங்கள் கட்சி விலை வாசி உயர்வுக்கு ஒன்றிய அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கை என்பதை சுட்டிக்காட்டிய தோடு, என்ன செய்தால் விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்தலாம் என்பதையும் முன்வைத் தோம்” என்று வாசுகி கூறினார். “குறைந்தபட்சம் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ஒன்றிய அரசு குறைத்தாலே ஒரு பகுதி விலைவாசியை குறைக்க முடியும். அதே போல் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி  வரியை ரத்து செய்ய வேண்டும். இதர பொருட்கள்  மீதான ஜிஎஸ்டி வரியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற மாற்றுக் கொள்கையை முன்வைத்தோம்” என்று தெரிவித்தார். வேலையின்மைக்கு தீர்வு - காலிப் பணியிடங்கள் நிரப்பல் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசிய  வாசுகி, “வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது என்று சுட்டிக் காட்டும் போதே, அதற்கான தீர்வையும் எடுத்துரைத்தோம். ஒன்றிய அரசுக்கு, மாநில அரசுக்கு சொந்தமான அலுவலகங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பினாலே, படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண் களுக்கும் கணிசமான வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று சுட்டிக்காட்டினார். இயற்கை வளங்கள் தேசியமயமாக்கல் “இயற்கை வளங்கள் தனியாருக்கு குத்த கைக்கு விடப்படுவது, சூறையாடப்படுவது குறித்தும் எடுத்துரைத்தோம். கனிம வளங்கள், தாது வளங்கள் மிகவும் அரிதானவை. அவை  தோண்ட தோண்ட வந்துகொண்டே இருக்காது.  எனவே அதை தேசியமயப்படுத்த வேண்டும், அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மக்கள் தான் அதனுடைய பாதுகாவலர்கள். ஏற்றுமதிக் குக்கூட அதை அனுமதிக்கக் கூடாது. எக்கார ணம் கொண்டும் தனியாரிடம் குத்தகைக்கு விடக் கூடாது என்று தனியார்மயத்திற்கு எதிரான மிகச்  சரியான நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சிதான் முன்னெடுத்தது” என்று கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் அணிதிரட்டல் “பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக கருதுகிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அவர்களை மனிதர் களாக பார்க்கிறது, பாவப்பட்டவர்களாக அல்ல. இந்த சமூகத்தின் தலைவிதியை மாற்றி அமைக் கும் வல்லமை படைத்த உழைப்பாளி வர்க்க மாக மக்களை பார்க்கக் கூடிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி” என்று வாசுகி தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் மக்களைத் திரட்டு கிறார்கள். சில  கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக  மக்களை திரட்டுகிறார்கள். சாதி, மத அடிப்படை யில் மக்களை திரட்டி ஒரு குறுகிய அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள்” என்று விமர்சித்தார். “ஆனால் தொழிலாளர்களின் நலனை பறிக்கக் கூடிய மோசமான தொழிலாளர் விரோத  சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாய மான விலை கிடைக்க வேண்டும், கூலி உயர  வேண்டும், 100 நாள் வேலை பேரூராட்சிகளி லும் விரிவுபடுத்தப்பட வேண்டும், நகர்ப்புறங் களிலும் வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த  வேண்டும் என்ற அடிப்படையில் விவசாயிகளை யும், விவசாயத் தொழிலாளர்களையும், ஆலை  தொழிலாளர்களையும், மக்களையும் அணி திரட்டுகிறது மார்க்சிஸ்ட் கட்சி” என்று கூறினார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் “அதேபோல் தலித் மக்கள், ஆதிவாசி மக்கள்  உரிமைகளை நிலைநாட்ட, பெண்கள் குழந்தை களை வன்முறையில் இருந்து பாதுகாக்க, ஒன்றிய பாஜக ஆட்சி நடத்துகிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்தி,  அவர்களைப் பாதுகாக்க என்ற உயர்ந்த ஜன நாயக நோக்கங்களுக்காக மக்களை அணி திரட்டுகிறோம்” என்று வாசுகி தெரிவித்தார். சர்வதேச ஒற்றுமை - மேற்காசிய நெருக்கடி சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசிய வாசுகி, “இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய கொடுரத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி யும், ஈரானில் உள்ள டூடே என்ற மார்க்சிய லெனி னியக் கட்சியும் இணைந்து ஏகாதிபத்தியத்தி னுடைய மோசமான பங்களிப்பை விமர்சித்து, மேற்காசியாவின் வரைபடத்தை மாற்றி எழுது வதற்கு இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள், அதை அனுமதிக்கக் கூடாது என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்” என்று கூறினார். “அதேபோல் அமெரிக்காவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், ஏகாதிபத்தியத்தின் செயல் பொறுப்பற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும், ஈரானுக்கு எதிரான யுத்தம், காசா வுக்கு எதிரான யுத்தத்தை தடுத்து நிறுத்த  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் கள். இப்படி உலகம் முழுவதும் மக்களின் குரலாய்  கம்யூனிஸ்டுகள் எதிரொலித்துக் கொண்டிருக் கிறார்கள்” என்று பெருமையுடன் தெரிவித்தார். தனியார்மயத்திற்கு எதிர்ப்பு - பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறை “ஒன்றிய அரசு பாதுகாப்பு துறையில் போர்  தளவாட உற்பத்தியை தனியாரிடம் விடுவதற் கும், அணு சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிற  அந்த துறையிலும் தனியாருக்கு இடமளிக்க வேண்டும் என்ற முடிவையும், வானத்தை வணிக மயமாக்குவது என்ற நிலைபாட்டையும் ஒன்றிய அரசு எடுத்துள்ளது” என்று விமர்சித்தார். “இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒன்றிய அரசு உடன்பாடு செய்தி ருப்பது எலன் மாஸ்கின் கார்ப்பரேட் நிறுவனமான  ஸ்டார் லிங்க். வானத்தை முழுவதும் வணிகமய மாக்குவதற்கு அவர்களுக்கு ஒப்புதல் கொடுத்து விட்டால், செயற்கை கோள் மூலமாக நாம் செய் யும் அனைத்து பரிமாற்றங்களும், பாதுகாப்பு துறையில் நடக்கும் ரகசியம் வரை அவர்களால் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது” என்று எச்சரித்தார். “ஏன் இந்தியாவில் இவற்றையெல்லாம் செய்கிற விஞ்ஞானிகள் இல்லையா? துறைகள் இல்லையா? இஸ்ரோ போன்ற அமைப்புகள் இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய வாசுகி, “இதன்மூலம் செயல்படுத்தினால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும், பொதுத்துறையும் பாது காக்கப்படும், இட ஒதுக்கீடும் பாதுகாக்கப்படும்” என்று கூறினார். நவீன தாராளமயத்திற்கு எதிர்ப்பு “தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் இந்த நவீன தாராளமய பாதையை கடைபிடிப்பதால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகள் மக்க ளுக்கு ஏற்படுகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட  இடதுசாரிகள் மட்டும்தான் நவீன தாராளமய பாதை என்பதே தவறு, அது தடுத்து நிறுத்தப்பட  வேண்டும், அது விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளி களுக்கும் உதவி செய்யும். ஏழை உழைப்பாளி மக்களுக்கு, நடுத்தர வர்க்கத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவாது என்ற உண்மையை மக்களி டம் எடுத்துக் கூறுவோம்” என்று தெரிவித்தார். கட்சியின் போராட்ட வெற்றிகள் உரையை நிறைவு செய்த வாசுகி, “மதுரை  டங்ஸ்டன் சுரங்கம் முதற்கொண்டு பொள்ளாச்சி  பாலியல் வன்கொடுமை வரை பல்வேறு பிரச்ச னைகள் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதனால் தான்  வெற்றி பெற்றது என்பதை எடுத்துக்கூறி மக்களை  அணி திரட்டுவோம்” என்று உறுதியளித்தார். (ந.நி.)