க்யூ எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் விஐடி பல்கலை. 142-வது இடம் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்தகவல்
வேலூர், அக்.15- க்யூ எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை யில் விஐடி பல்கலைக்கழகம் 142-வது இடத்தைப் பெற்றுள்ளதாக விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, கிராமப்புற ஏழை மாண வர்கள் உயர்கல்வி பெறும் வகையில் ஸ்டார்ஸ் திட்டத்தில் 102 மாணவர்களுக்கு இலவச கல்வியும், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களை முன்மாதிரியாக மாற்ற கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க ஸ்டார்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 28 விழுக்காடாக உள்ளது, தமிழகம் 47 விழுக்காடாக உள்ளது. விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் கூறுகையில், 2024 ஷாங்காய் ஏஆர்ட பிள்யூயு தரவரிசை பட்டியலில் இந்தியா வில் முதல் 2 இடங்களில் விஐடி உள்ளது. பிஎச்டி படிப்பை இந்தியாவிலேயே அதிக மான மாணவர்கள் விஐடியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உலக ளவில் முதல் 2 சதவீத விஞ்ஞானிகளாக விஐடியில் 101 பேராசிரியர்கள் பணிபுரி கின்றனர். க்யூ எஸ் தரவரிசையில் பொறியியல் தொழில்நுட்பத்துறையில் விஐடி 142-வது இடத்திலும், இந்திய அளவில் 9-ம் இடத்திலும் உள்ளது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 2016 முதல் தொடர்ந்து விஐடி நாட்டின் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. நடப்பு ஆண்டில் பல்கலைக்கழக வரிசையில் 14-வது இடம், பொறியியல் வரிசையில் 16-வது இடம், ஒட்டுமொத்த தரவரிசையில் 21-வது இடம் பெற்றுள்ளது. விஐடியில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். வேதியியல் பாடப்பிரிவில் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய பேராசிரியர் சூசுமு கிடகவாவுடன் விஐடி பேராசிரியர் தாமஸ் குமார் பான்டா ஆராய்ச்சிக் கட்டுரை களை வெளியிட்டுள்ளார் என்றார். சந்திப்பின் போது ரமணி பாலசுந்தரம், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உடனிருந்தனர்.
