தஞ்சாவூர், அக்.19- ‘தூர்தர்ஷன் தமிழ்’ தொலைக்காட்சி நிலை யத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியோடு, இந்தி நாள் விழா கொண்டாட் டங்களும் நடத்தப்பட் டன. ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த விழாவின் போது, இசைக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில், ’தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி பாடப்படாமல் இருட்ட டிப்பு செய்யப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், விசிக என அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தன. ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிடநல் திருநாடு வரி தவிர்க்கப்பட்டதில், ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்திருந்தார். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத் தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடு வேன்” என்று ஆளுநர் ஆர்.என். ரவியும் சமாளித்தி ருந்தார். இந்நிலையில், சனிக்கிழமையன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்த விழா வின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப் பட்டது. அத்துடன், ஆளுநர் ஆர்.என். ரவியும், வாய சைத்து தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.