tamilnadu

img

வள்ளுவர் கோட்டம் மறுசீரமைப்பு: அமைச்சர்

சென்னை,பிப்.22- சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரத்தின்போது திமுக எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தினை புனர மைக்கும் பணிகள் எப்போது முடிவடை யும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர்  நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த  நிலையில் இந்த அரசு பொறுப்பேற்ற வுடன் வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை  கூடம், மழைநீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சிக் கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள்  முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற் குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்” என்றார்.