திண்டுக்கல், பிப்.14- காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்கள் விலை அதிகரித்ததால் கொடைக்கானலில் கொய்மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் பசுமைக்குடில் அமைத்து கொய்மலர் சாகுபடி பல ஏக்கர் பரப்பில் நடக்கிறது. உயர்ரகப் பூக்களான கார்னேசன், ஜிப்சோப்ரா, சார்ட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்செடி களை சாகுபடி செய்து பராமரித்து சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்க ளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். பூங்கொத்துகள், அலங்காரம் செய்ய கொய்மலர்கள் பயன்படு கின்றன. காதலர் தினத்தன்று ரோஜா மற்றும் இந்த கொய்மலர்களை காத லர்கள் தங்களது காதலிக்கு பரிசாகக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். இதனால், காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்களுக்கு கிராக்கி ஏற்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 20 பூக்கள் கொண்ட மலர்க் ்கொத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்ப னையானது. காதலர் தினத்தை முன்னி ட்டு விலை அதிகரித்து 20 பூக்கள் கொண்ட மலர்க்கொத்து ரூ.200 முதல் ரூ.300 வரை விற்றது. இதனால், விவசா யிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக காதலர் தினத்தில் மலர்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் அவை வீணாகிப் பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்தனர். இந்த ஆண்டு அதிக விலைக்கு கொய் மலர்கள் விற்பனையாவது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, என்கின் ்றனர் கொய்மலர் சாகுபடி விவசாயி கள்.