வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் கேரள அரசு அமைக்க உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தை ரூ.8.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க உள்ளதாக அறிவித்தார்.
தமிழக - கேரள முதல்வர்கள் துவக்கி வைத்தனர்
வைக்கம், ஏப்.1- கேரளத்தின் வைக்கத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த வைக்கம் சத்தியாகிரக போராட்டம் நாடு முழுவதும் சமூக சீர்திருத்த போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதன் நூற்றாண்டு விழாவை போராட்டம் நடைபெற்ற கால அள வான 603 நாட்கள் கேரளா முழு வதும் சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதுன் துவக்க விழா சனியன்று (ஏப்.1) வைக்கம் கடற்கரையில் பிரம் மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சுடர் ஏற்றி விழாவை துவக்கி வைத்து உரை யாற்றினர். விழாவுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் வி.என்.வாசவன் தலைமை வகித்தார். கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வர வேற்றார். தலைமை செயலாளர் சி.பி.ஜாய் 603 நாள் விழா நிகழ்ச்சி நிரலை அறிவித்தார். அமைச்சர்கள் கே.ராதாகிருஷ்ணன், ஆன்டனி ராஜ், அகமது தேவர் கோவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, சிபிஎம் தமிழ்நாடு செய லாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ கேரள மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே மாணி, எஸ்என்டிபி தலைவர் வெள்ளாப் பள்ளி நடேசன், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். விழா வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக தமிழக முதல்வரும் கேரள முதல்வரும் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கேற்பை குறிக்கும் வகையில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தி, டி.கே.மாதவன், மன்னத்து பத்ம நாபன் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வைக்கம் நகரில் தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கும் இருவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.