tamilnadu

img

தோழர் எம்.பாண்டியன் சிலை திறப்பு

சென்னை, ஜூன் 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு உறுப்பினராக பணி யாற்றி மறைந்த தோழர் எம்.பாண்டியனின் உருவச்சிலை ஞாயிறன்று (ஜூன் 6) திரிசூலத்தில் நடைபெற்றது. தோழர் எம்.பாண்டியன் சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளராகவும், திரிசூலம் ஊராட்சி மன்ற கவுன்சிலராகவும் செயல்பட்டவர். கொரோனா தொற்றால் கடந்தாண்டு மே மாதம் உயிரிழந்தார். கட்சியின் பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், உருவச்சிலையை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.தாமோதரன், எஸ்.நரசிம்மன், எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிக்குழு உறுப்பினர் ஜான்சி,கிளைச் செயலாளர் பா.முரளி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜ், துணைத் தலைவர் ஆர்.குமார்,பகுதிச் செயலாளர் சி.நாக ராஜ், வியாபாரிகள்சங்கத் தலைவர் பி.ஜீவா, ஜி.ராஜேந்திரன் (தையல்), எம்.சிந்தன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.