tamilnadu

பல்கலை. மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரம் ஒன்றிய அரசின் முகமையையும் விசாரணைக்கு உட்படுத்துக!

சென்னை, டிச. 31 - அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் ஒன்றிய அரசின் தேசிய  தகவல் மையத்தையும் விசார ணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர் பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது: வலுவாக எழுந்த கண்டனக் குரல்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் விபரங்களோடு வெளி யாகி பரவலான கண்டனத்திற்கு உள்ளானது. இந்த விஷயத்தில் குற்ற மிழைத்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து நட வடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் கடுமையாக எதிர்வினையாற்றியன. இப்போது மட்டும்  எப்ஐஆர் கசிந்தது எப்படி? இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய தகவல் மை யமே காரணம் என்று அந்த முக மையின் விளக்கம் மூலம் தெரிய வந்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறானால், புதிய குற்ற வியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலை யில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட் டோர் விபரங்கள் இப்படி கசிய வில்லையே, இந்த வழக்கில் மட்டும்  விபரங்கள் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுகிறது. சதி உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்! எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலி யல் வன்கொடுமை வழக்கின் விப ரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமெனவும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிவாரணத்தை தாமத மின்றி வழங்க வேண்டுமென்று சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.