tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் ஞாயி றன்று முதல் 1, 5-ஆவது  அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடை பெற்று வருகிறது. 2, 3  மற்றும் 4-ஆவது அலகு கள் பராமரிப்பு பணி களுக்காக நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
  2. நடப்பு நிதியாண்டில் அதி காரப்பூர்வ தரவுகளின் படி, ரூ.100 கோடிக்கும் மேலான தொகையில் நடைபெறும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மோசடி வழக்குகளின் எண்ணி க்கை 118 ஆக குறைந்துள் ளது. இந்த எண்ணிக்கை 2020-21 கால கட்டத் தில் 265 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணி க்கை 80ஆக குறைந்து ள்ளது.
  3. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர் களை மீட்கும் பணி 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 24 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும்  மாயமான 25 பேரை  தேடும் பணி நடைபெற்று  வருவதாக ராணுவத்தி னர் தெரிவித்தனர். 
  4. இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பயங்கர கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தால் அரிச்சல் முனை சாலை அருகே தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை  முழுவதும் சிதறி கிடப்ப துடன் கடல் நீரானது சாலையின் தடுப்புச் சுவரையும் தாண்டி சாலை வரை வந்தது. 
  5. உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள கடைசி முக்கிய நகர மான ‘லிசிசான்ஸ்க்’ ஞாயிறன்று ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி புதினிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷோய்கு கூறும் போது, லுஹான்ஸ்க் மக்கள் குடி யரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷ்ய படைகள் இணைந்து நடத்திய போரில், லிசிசான்ஸ்க் நக ரம் முழு கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப் பட்டது’’ எனக் கூறியுள் ளார்.
  6. உத்தரப்பிரதேசம் மாநி லம் விக்ரம்பூர் கிராமத் தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது சமை யல் எரிவாயு சிலிண்ட ரில் ஏற்பட்ட கசிவு கார ணமாக வெடித்து சிதறி யது. இந்த விபத்தில் ஒரு சிறுமி, 3 பெண்கள் என  நான்கு பேர் உயிரிழந்த னர். மேலும், 3 பேர் படு காயமடைந்தனர்.
  7. காரைக்காலில் வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 
  8. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்ப‍டை யில் இந்தியா, மேலும் 2, 500 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியுள்ளது.
  9. கடந்த ஜுன்  மாதத்தில் மட்டும் 7 கோடியே 40  லட்சம் ரூபாய் மதிப்பிலான  போதைப் பொருட்களை, ரயில்வே பாதுகாப்பு படை யினர் பறிமுதல் செய்ததாக ரயில்வே அமைச்சகம் தெரி வித்துள்ளது.
  10. மகாராஷ்டிர மாநிலத் தின் சட்டப்பேரவைத் தலை வராக பாஜகவின் ராகுல்  நர்வேகர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்,
  11. உதய்பூரில் தையல்கா ரர் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை 10 நாள்கள் போலீஸ்  காவலில் வைத்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் அனு மதி அளித்தது.