tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட் 2025-26  என்பது பெருநிறுவனங்க ளுக்கு ஆதரவான, மக்கள்  விரோத பட்ஜெட்டாக உள்ளது என  இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) பொதுச்செய லாளர் தபன் சென் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”தேசிய பணமாக்கல் திட்டத்தின் (NMP) மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10  லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மின்துறை, எண்  ணெய், போக்குவரத்து, நெடுஞ்சா லைகள், நிலக்கரி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மய மாக்கும் முயற்சி இது. 

ரயில்வே பட்ஜெட் ரூ.2.62 லட்  சம் கோடியிலிருந்து ரூ.2.55 லட்சம்  கோடியாக குறைக்கப்பட்டுள்ளது டன், ரயில்வே பாதுகாப்பிற்கான நிதியும் ரூ.322.50 கோடி குறைக்  கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதி கரித்து வரும் ரயில் விபத்துகளை  கருத்தில் கொண்டாலும் பாது காப்பு நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0  மூலம் பொதுத்துறை நிறுவனங்க ளின் 100 குற்றவியல் விதிகள் நீக்கப் படுவது மிகவும் ஆபத்தானது. ஏற்கெனவே 2023இல் 180 விதி கள் நீக்கப்பட்டுள்ளன. இது தொழி லாளர்களின் உரிமைகளை பறிக் கும் செயல்ஆகும். விவசாயம் மற்  றும் சார்ந்த துறைகளுக்கான நிதி  ரூ.2.12 லட்சம் கோடி குறைக்கப் பட்டுள்ளது. அதே போல ஊரக வளர்ச்சிக்கு ரூ.3,675 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) நிதி ஒதுக்கீடு ரூ.3,302  கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்த  மக்கள் விரோத பட்ஜெட்டிற்கு எதி ராக வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு சிஐ டியு அழைப்பு விடுத்துள்ளது.