tamilnadu

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான, அதை கட்டுப்படுத்தாத மாநில பாஜக அரசு பதவி விலக வேண்டும்

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான, அதை கட்டுப்படுத்தாத மாநில பாஜக அரசு பதவி விலக வேண்டும், நாடாளுமன்றத்தில் விதி 267 இன் கீழ் பிரதமர் அறிக்கை சமர்ப்பித்து முழு நாள் விவாதிக்க வேண்டும், பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று சைதாப்பேட்டையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.