சென்னை, ஆக. 19 - வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்க வலி யுறுத்தி திங்களன்று (ஆக.19) பல்ல வன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழி யர்கள் முழக்கமிட்டனர். 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை சரி செய்து, பிற துறை ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த வேண்டும், 25ஆயிரம் காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை தர வேண்டும், ஓய்வூதி யர்களுக்கு 105 மாதங்களாக வழங்காத அகவிலைப்படி உயர்வை வழங்குவதோடு, மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த நியமனம், தனியார்மய நட வடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த வாயிற்கூட்டம் நடை பெற்றது. சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், டிடிஎஸ்எப், ஏஏஎல்எல்எப் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார், “போக்குவரத்து துறை அமைச்சர், துறைச் செயலாளர் ஆகி யோரை சந்தித்து மனு அளித்துள் ளோம். அதன்மீது பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை விரைந்து தீர்க்க வேண்டும்” என்றார். எம்எல்எப் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் வி.சசிக் குமார், வி.தயானந்தம் (சிஐடியு), ஆறு முகம், நந்தாசிங் (ஏஐடியுசி), அந்திரி தாஸ் (எம்எல்எப்), அர்ச்சுணன் (ஏஏஎல்எல்எப்), திருமலைச்சாமி, பத்ம நாபன் (டிடிஎஸ்எப்) உள்ளிட்டோர் பேசினர்.