tamilnadu

img

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் தொடர் மழை பெய்கிறது. இதையடுத்து, வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில், குளு குளு நகரான கொடைக்கானலில் ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பசுமை போர்த்திய மலைமுகடுகள், புல்வெளிகள் அழகுற காட்சியளித்தது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.  ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.