tamilnadu

img

தக்காளி விலை மேலும் குறைந்தது

சென்னை, ஆக.8- தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்க ளாக சரிந்து வருகிறது.  கிலோ ரூ.200-வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் இறங்கி வருவதால் இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்து உள்ள னர். கோயம்பேடு, காய்கறி  சந்தைக்கு   ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்க ளில் இருந்து வழக்கமாக 60 லாரிக ளுக்கு மேல் தக்காளி வரும். கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது. 25 லாரிகளே சராசரி யாக வந்தன. இதனால் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் அதிக ரித்தது. தற்போது வடமாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாததாலும், ஆந்திரா மற்றும்  கர்நாடகாவில் வடமாநில வியாபாரி களின் தக்காளி கொள்முதல் குறைந்த தாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக  அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது. இப்போது 30 லாரிகளுக்கு மேல் தக்காளி வருகிறது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 40 நாட்களை கடந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தக்காளியின் விலை தற்போது குறையத்தொடங்கியுள்ளது.