tamilnadu

img

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புக்கான தேர்வுக்கு அதிகம் விண்ணப்பியுங்கள்!

சென்னை, ஜூலை 19 - ஒன்றிய அரசின் அகில இந்திய மட்டத்திலான வேலைவாய்ப்பு தேர்வு களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பிக்கும் நிலை உள்ள நிலையில், அதிக மானோர் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள் ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேசன், இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமைகள் மீது தாக்குதல்

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்புகளைப் பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அதுதொடர்பான பல பிரச்சனைகளையும் எழுப்பி வந்துள்ளேன். தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குத் தர மறுப்பது, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களை வெகு தூரத்தில் தேர்வுகளுக்கு துரத்துவது, இந்தி மொழியை தேர்வு முறைமையில் திணிப்பது, இட ஒதுக்கீடு அமலாவதில் அநீதி இழைக்கப்படுவது என தொடர்ந்து நான் எழுப்பிய பிரச்சினைகளில் தீர்வுகளையும் காண முடிந்தது. ஆனாலும் ஒன்றிய அரசு எல்லாவற்றையும் மையப்படுத்துவது என்ற  பெயரில் மாநில உரிமைகள், தமிழ்நாடு இளை ஞர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதை விடவில்லை.  மண்டல வாரியான தேர்வுகளை ஒழித்துக் கட்டிய ஒன்றிய அரசு முந்தைய காலங்களில் மண்டல வாரியான பணி நியமன தேர்வுகள் இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளை ஞர்கள் நிறைய வேலைவாய்ப்பை பெற்றனர். அதனால் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெற்றனர். தாய் மொழி அறிந்தவர்கள் அதிகமாக உள்ள அலுவலகச் சூழல், எளிய மக்கள், சேவை பெற உகந்த இடங்களாக அரசு அலுவலகங்களை வைத்திருந்தது. இப்போதோ ஒரு தேசம், ஒரு தேர்வு என்ற முறையில் ஒன்றிய அரசின் பணி களுக்கு தேசம் முழுமைக்குமான தேர்வு முறை மையை அமலாக்குகிறது. 

தமிழ்நாட்டு அலுவலகங்களில்  போதிய தமிழர்கள் இல்லை

“பணி நியமனத் தேர்வுப் பயிற்சி” பெரும் தொழி லாக மாறி விட்டது. “நீட்” மோசடியில் எவ்வாறு தேர்வுகள் நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டன என்பதை நாடு தற்போது அறிந்துள்ளது. முறை சார்ந்த கல்வியைக் கூட ஒதுக்கி விட்டு பயிற்சி  மையங்களை நோக்கி மாணவர்கள், இளை ஞர்கள் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள  அலுவலகங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறுவதும் குறைந்து விட்டது. ஆகவே மீண்டும் மண்டல அளவிலான தேர்வுகளை நான் வலி யுறுத்தி வருகிறேன். 

அடுத்தடுத்து வரும் இரண்டு தேர்வுகள்

இந்த நிலையில் இரண்டு தேர்வுகளுக்கு மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஒன்று Combined Graduate level தேர்வு. எதிர்வரும் ஜூலை 24 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 7 நாட்கள்தான் உள்ளன. வருமானவரி, கலால், கணக்காயர் போன்ற துறை களில் பணி நியமனங்கள் பெற முடியும். இன்னொன்று Multi Tasking staff. இதற்கு +2 கல்வித் தகுதி போதுமானது. எதிர்வரும் ஜூலை 31 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி. இன்னும் 14 நாட்கள்தான் உள்ளன.  ஒரு பக்கம் மண்டல மட்ட தேர்வுகள் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், இன்னொரு பக்கம் அகில இந்திய மட்ட தேர்வுகளில் நாம் பங்கேற்கா மல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது. ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிப்பது மிகக் குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் தெரி விக்கின்றன.  அதிகமானோர் விண்ணப்பியுங்கள்  அரசுப் பணி தேர்வில் வெல்லுங்கள் ஆகவே என்னுடைய வேண்டுகோள்! அன்பிற்குரிய தமிழ்நாட்டு இளைஞர்களே நீங்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். தரமான நிலையான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள காலம். அரசு வேலைகள் பணிப் பாதுகாப்புடன் கூடியது. மக்களுக்கும் சேவை புரியும் வாய்ப்புடையது. ஆகவே உடனே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பியுங்கள். வெல்லுங்கள். உங்களால் தமிழ்நாடு அலுவலகங்கள் மக்களின் நண்பர்களாக மாற முன் வாருங்கள். வாழ்த்துகள். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.