சிபிஎம் மாநில செயற்குழு கடும் கண்டனம்!
யிலாடுதுறை அருகே முட்டத் தில், கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட 2 மாணவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: கூர்மையான ஆயுதங்களால் கொடூரப் படுகொலை மயிலாடுதுறை மாவட்டம், மயி லாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிரா மத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர் கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகி யோரை கள்ளச்சாராய வியாபாரி கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்ப வம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சமூகவிரோத சக்திகளின் இந்த இரட்டை படுகொலையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது. முட்டம் கிராமத்தில் வடக்குத் தெரு பகுதியில் ராஜ்குமார், தங்க துரை, மூவேந்தன் ஆகியோர் தொட ர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பெரம்பூர் காவல்நிலையம் மற்றும் மயிலாடு துறை மதுவிலக்குப் பிரிவிற்கு 8-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித் துள்ளனர். ஆனால், பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கள்ளச் சாராய வியாபாரிகளிடம் கை யூட்டுப் பெற்றுக் கொண்டு புகார் கொடுக்கும் மக்களை மிரட்டுவது, வழக்குப் போடுவது என கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு ஆதர வாக செயல்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி புகார் அளிப்ப வர்கள் குறித்த விபரங்களை சாராய வியாபாரிகளிடமும் தகவல் கூறி வந்துள்ளார். சாராய வியாபாரி களும் புகார் கொடுத்தவர்களை தாக்குவது, கொலைமிரட்டல் விடு வது என வாடிக்கையாக இருந்துள்ளது. உண்மைக் காரணத்தை மூடிமறைப்பது சரியல்ல! கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி யில் கள்ளச்சாராயம் குடித்து தொடர்ச்சி 5 ஆம் பக்கம்
காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை படு கொலை செய்த கள்ளச்சாராய வியாபாரிகளை மட்டுமன்றி, கையூட்டு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வந்த காவல்துறை ஆய்வாளர் நாகவள்ளியையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மயிலாடுதுறையில் சனிக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையிலான இந்த ஆர்ப் பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், ஏ. ரவிச்சந்திரன், டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, சி. விஜயகாந்த், அமுல் காஸ்ட்ரோ, டி.ஜி. ரவி மற்றும் நகரச் செயலா ளர் டி. துரைக்கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஒன்றி யச் செயலாளர்கள், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.