tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட  30 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட மூவர் கைது தஞ்சாவூர்,

மே 7 - தஞ்சாவூரில் கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளதாக  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராஜாராமிற்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப் பட்டு, சுழற்சி அடிப்படையில் காவல்துறையினர் கண்கா ணித்து வந்தனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலை மையில் தனிப்படை காவல் ஆய்வாளர் டேவிட் தலைமை யிலான காவல்துறையினர், தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாரியம்மன்கோவில் புறவழிச் சாலை யில் வாகன சோதனை செய்தனர். அப்போது, திருச்சியில்  இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசுப் பேருந்தை  மறித்து சோதனை செய்தபோது, கரூர் பகுதியை சேர்ந்த  ராஜேந்திரன் (60), ஈரோடு பகுதியை சேர்ந்த முருகன் (38),  சுந்தரி (40) ஆகியோர் 30 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே கஞ்சாவை பறிமுதல் செய்து, ராஜேந்திரன், முருகன், சுந்தரி ஆகிய மூவரை யும் தனிப்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையில், ஆந்திரா மாநிலத் தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தனி வாகனத்தில்  சென்றால் காவல்துறையினருக்கு சந்தேகம் வரும்  என்பதால், அரசு பேருந்தில் கஞ்சாவை எடுத்துக்கொண்டு  சுற்றுலா பயணிகள் போல பயணித்து, வியாபாரிகளிடம் கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு வருவது தெரிய வந்தது.  தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பேருந்து மற்றும் ரயில் வழியாக அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல்  வருவதால், பேருந்துகள், ரயில் ஆகியவற்றை கண்கா ணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 14-தஞ்சாவூரில்  ஜமாபந்தி துவக்கம் தஞ்சாவூர், மே 7-  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்களிலும், 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 14 முதல் 29 ஆம்  தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற  உள்ளது. ஒரத்தநாடு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில், மே 14 முதல் 22 ஆம் தேதி வரையும், திருவிடைமரு தூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 14  தொடங்கி 21 வரையிலும், தஞ்சாவூரில் தனி மாவட்ட  வருவாய் அலுவலர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை)  தலைமையில் மே 14 முதல் 21 வரையிலும், பாப நாசத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் தலைமையில் மே 14 முதல் 22 ஆம் தேதி வரையிலும், திருவையாறில் வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 14 முதல் 16  ஆம் தேதி வரையிலும், பட்டுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 14 முதல் 29 ஆம் தேதி  வரையிலும் நடைபெற உள்ளது. பூதலூரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நல அலுவலர் தலைமையில் மே 14 முதல் 20 ஆம் தேதி வரையிலும், கும்பகோணத்தில் மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் மே 14 முதல் 21 ஆம் தேதி வரையிலும்,  பேராவூரணியில் தனித்தனி ஆட்சியர் (முத்திரை கட்ட ணம்) தலைமையில் மே 14 முதல் 20 ஆம் தேதி வரையி லும், திருவோணத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் மே 14 முதல் 20 ஆம் தேதி வரையிலும் நடை பெற உள்ளது.  வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் நில உட மையாளர்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த  எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணுதல் குறித்தும், பொது மக்கள் வீட்டு மனை ஒப்படை, நில ஒப்படை மற்றும் முதி யோர் உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கை கள் குறித்தும் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) அலு வலர்களிடம் மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம்.  மேலும் வருவாய் தீர்வாய நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால், விவசா யிகள் மற்றும் பொதுப் பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை,  வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த  உட்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட  உள்ளது. இக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்து  முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை அளிக்கலாம்  என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித் துள்ளார்.