பேராசிரியர் எம்.கே.சானு சாடல் ஆலப்புழா, அக். 9- “அமைதி வடிவமான மகாத்மா காந்தியையே சுட்டுக் கொன்றவர்கள் தான், இன்று நால்வர்ணம், சனாதனம் என்று பேசித் திரிகிறார்கள்”, என பேராசிரியர் எம்.கே.சானு சாடி யுள்ளார். கேரள மாநிலம், ஆழப்புழாவில், ‘சுதாகரன் நினைவு விருதை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப்புழா மாவட்டச் செயலாளர் ஆர். நாசரிடம் இருந்து பேராசிரியர் எம்.கே.சானு பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், “சனாதனம் என்பது அழகான சொல்; அது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்; சனாதன தர்மம் அந்த சகோதர த்துவத்தைத்தான் வளர்க்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது ஒரு மதக் கருத்தியலாக வளர்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். சாதி, மதம் எதுவாக இருந்தாலும் மனிதனின் அடிப்படைக் கடமை மனித நேயத்தை அடைவதே. கம்யூனிஸ்ட் கட்சி அதன் தொடக்கத்திலிருந்தே சாதி, மத கொடுங்கோன்மைக்கு எதிராக செயல்பட்டு வந்தது. சகோதரன் அய்யப்பனின் மிஸ்ரா போஜனம் (சமபந்தி) நடந்த நேரத்தில், எந்தக் கட்சியும் இல்லை, ஆனால் எதிர்கால கம்யூனிஸ்ட் குழந்தைகள் அதை ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கேரள மக்களை சுயமரியாதை உள்ளவர்களாக ஆக்கி யது. அதனால்தான் கேரளாவில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த அமைச்சர வைக்கு எதிரானதுதான் விமோசன சமரம் (விடுதலைப் போராட்டம்). இந்தப் போராட்டம் சாதிய வகுப்பு வாத சக்திகளின் ஆதரவுடன் தூண்ட ப்பட்டது. அந்த அமைச்சரவையை பதவி நீக்கம் செய்தது அநீதியாகும். இன்றும் அந்தத் தீமையை தொடருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. சங்பரிவார் அதற்கு தலைமை வகிக்கிறது. அவர்கள் தீவிர சாதி உணர்வை வளர்க்கிறார்கள். மீண்டும் நால்வர்ணம் கொண்டு வர வேண்டும் என்று பிரச்சாரம் செய் கின்றனர் என்றார்.