tamilnadu

img

மருத்துவப் படிப்பில் சேர இந்த ஆண்டு கடும் போட்டி

சென்னை, ஜூன் 11- மருத்துவம் மற்றும் பல் மருத்து வம் உள்ளிட்ட இளநிலை மருத்து வப் படிப்புகளில் சேருவதற்கு, ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேரமுடியும். அந்த வகையில், கடந்த சில  வருடங்களை விட இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் அதிக எண்ணிக்கையிலான மாண வர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியலில் தமிழக மாணவர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும். அவர்கள் 720க்கு 720 மார்க் எடுத்தனர். மேலும் 600க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1538 பேர் மட்டுமே 600-க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருந்தனர். எனவே, இந்தாண்டு அரசு மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப் பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவக் கல்லூரி அல்லது தற்போது உள்ள  மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு கடினமான சூழல் இந்த வருடம் நிலவக்கூடும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்து டன் இணைக்கப்பட்டுள்ள 3 சுய  நிதி நிறுவனங்கள் உள்பட 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங் கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.  கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால் அதற்கு இந்த ஆண்டு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் மரு த்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற் படும் சூழல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.