tamilnadu

img

அனைத்து சாதியினருக்கும் ஒரே சுடுகாடு-இடுகாடு 3 ஆவது முறையாக ரூ.10 லட்சம் பரிசு பெற்ற திருவிளையாட்டம் ஊராட்சி

மயிலாடுதுறை, அக்.28 - ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி சுடுகாடு, உயர்ந்த சாதி சுடுகாடு மேடான  பகுதிகளிலும், ஒடுக்கப்பட்ட மக்க ளின் சுடுகாடுகள் பள்ளமான பகுதியி லும், அதுவும் ஊரிலிருந்து கடைக் கோடியில் அமைக்கப்பட்டு தீண்டாமை  எனும் கட்டமைப்பிற்கு, மாற்றாக முற்றி லும் முன்மாதிரி கிராமமாக விளங்கு கிறது திருவிளையாட்டம்.  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்த  கிராமம் பெருமூளை என அழைக்கப் பட்டது. இவ்வாறு அழைத்து வந்ததை திருவிளையாட்டம் என பெயர் மாற்றி,  ஊரையே ஒட்டுமொத்தமாக நவீன கிராமமாக மாற்றியமைத்தவர் அய்யா  ஆ.சௌரிராசன்.  இவர், 1960-களிலேயே எல்லா மக்களுக்கும் ஒரே சுடுகாடு அமைத்து, தனது சொந்த நிலங்கள், தோட்டங்கள்,

வீடு என எல்லாவற்றையும் விற்று,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரமான வீடு களை கட்டித் தந்தவர். நீண்டதூரம் பயணித்து கல்வி பயின்ற மக்களுக் காக, பள்ளிக்கூடம் அமைத்து கல்வி யறிவு கிடைக்கச் செய்தவர். எல்லா  மக்களும் சாதி மறந்து ஒரே பகுதியில்  எதிரெதிரே வீடுகளை கட்டிக்கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ வழி காட்டியவர். தந்தை பெரியாரின் உண்மை தொண்டனாக பல்வேறு சமூக புரட்சியை செய்ததோடு, தனக்கு பின் னாலும் அவை தொடர வேண்டும் என்ற  உறுதியோடு, பலரையும் உருவாக்கிய வர். அய்யா சௌரிராசனுக்கு பின்னால்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கு எண்ணம் கொண்ட திரு விளையாட்டத்தை தொடர்ந்து பாது காத்து வருகின்றது. சாதி மறுப்பு திரு மணங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த ஊரின் ஊராட்சித் தலைவ ராக இருமுறை பதவி வகித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பி.சீனிவாசன், 1996 மற்றும் 2017-களில் தீண்டாமை இல்லா கிராமத்திற்காக ரூ.10 லட்சம் பரிசு பெற்றுள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சாதி வேறு பாடற்ற மயானம் பயன்பாட்டில் உள்ள தற்காக திருவிளையாட்டம் ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.10 லட்சத்திற்கான நிதி ஆணையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, திரு விளையாட்டம்  ஊராட்சி மன்றத் தலை வரிடம் வழங்கி பாராட்டியுள்ளார்.  கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலைவராக இருந்த போது, தீண்டாமை  இல்லாத கிராமமாக அறிவிக்கக் கோரி, பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தினர். அதன்பிறகே அதிமுக அரசு பரிசுத்தொகை வழங்கி யது.  

தற்போது தமிழ்நாடு அரசு, இந்த  கிராமத்தைப் பாராட்டி பரிசு வழங்கி யுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வரவேற்கிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்  துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரி விப்பதாகவும், பரிசுத் தொகையை மக்களுக்கு பயன்படும் விதமாக, அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வா கம் செய்ய வேண்டுமென கட்சியின் மாவட்டச் செயலாளரும், இருமுறை திருவிளையாட்டம் ஊராட்சியின் தலை வராக பதவி வகித்த பி.சீனிவாசன் கூறியுள்ளார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்  திருவிளையாட்டம் கிளை சார்பில் நன்றி யும், வரவேற்பும் தெரிவித்துள்ளதோடு, எல்லா சாதியினருக்கும் ஒரே சுடுகாடு என அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தும்கூட, அந்த சுடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள், கட்ட மைப்புகள் இதுவரை செய்து தரவில்லை.  எனவே, உடனடியாக அந்த சுடு காட்டில் அடிப்படை வசதிகளை செய்ய  வேண்டுமென திருவிளையாட்டம் கிளை கோரிக்கை விடுத்துள்ளது.