tamilnadu

img

அறிவியலாய் சிந்திப்போம் – பின்னலாய் இணைவோம்

திருப்பூர், செப்.12- திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் நடத்தும் மாரத்தான் போட்டிக் கான இலச்சினையை திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வெளியிட்டார். உழைக்கும் மக்களின் பேராயுத மாகவும், ஊடக உலகின் உண்மை யின் பேரொளியாக தீக்கதிர் நாளிதழ் திகழ்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் குரலை, அரசியல் உண்மைகளை உரக்கச்சொல்லும் தீக்கதிர் நாளித ழின் சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக பின்னலாடை மையமான திருப்பூர் மாவட்டத்தில், தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கத் திற்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதன்ஒருபகுதியாக, திருப்பூரில் தீக்கதிரை திக்கெட்டும் கொண்டு சேர்க்கும் விதமாய், ‘அறிவியலாய் சிந்திப்போம்; பின்னலாய் இணை வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மாரத்தான் போட்டி திருப்பூரில் நடைபெற உள்ளது. அக்டோபர் 1  அன்று நடைபெற உள்ள இப்போட்டிக்கான இலச்சி னையை அறிமுகம் செய்யும் நிகழ்வு,  திருப்பூரில் நடைபெற்றது. இந்த இலச்சினையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வெளியிட்டார். இதனை, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கல்கிராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.