கண்ணூர், ஜுன் 29- மணிப்பூரில் இனப்படுகொலை நடக் கிறது என்கிறார் பேராயர் ஜோசப் பாம்பிளானி. கலவரத்தை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் தவறிவிட்ட தாகவும், கிறிஸ்தவ தேவாலயங் களை குறிவைத்து கலவரம் பரவியுள்ள தாகவும், மணிப்பூர் கலவரம் 2002 குஜ ராத் இனப்படுகொலை போன்றது என் றும் ஜோசப் பாம்பிளானி கூறினார். இதுகுறித்து வியாழனன்று கண்ணூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், பிரதமர் அமெரிக்கா சென்று இந்தியாவில் பாகு பாடு இல்லை என்று சொன்னார். ஆனால், இதை பிரதமர் மணிப்பூர் கிறிஸ்தவர்களிடம் கூற முடியுமா? சிறு பான்மையினரை வேட்டையாடுவது வேறு இடங்களில் நடப்பதாகவும், மணிப்பூரில் அரசு ஆதரவுடன் நடக்கும் கலவரங்கள் என்றும் ஜோசப் பாம்பிளானி கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜ ராத்தில் நடந்த கலவரத்தின் மற்றொரு வடிவமாக மணிப்பூரில் உள்ள சூழ்நிலை மாறியுள்ளது. மிகவும் திட்ட மிட்ட வன்முறைகள் நடந்துள்ளன என்றார். ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சியையும் பாம்பிளானி எதிர்த்தார். மேலும், சட்டப்பேரவை களில் சட்டம் கொண்டு வரப்பட்டு, அது குறித்த விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தலச்சேரி பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு ரப்பர் விலையை ரூ.300 என அறிவித்தால், பா.ஜ.க.வுக்கு உதவுவோம் என்று கூறினார். ரப்பர் விவ சாயிகளுக்கு உதவினால் பாஜகவை ஆதரிப்பதாக கூறிய பிஷப் .ரப்பர் விலையை ரூ.300 ஆக ஒன்றிய அரசு உயர்த்தினால் பாஜகவுக்கு உதவுவ தாகவும், கேரளாவில் ஒரு எம்பி கூட இல்லாத பிரச்சனையை மாற்றுவதாக வும் வாக்குறுதி அளித்திருந்தார். இது கு றித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப் பியபோது, மணிப்பூர் கலவரத்துடன் ரப்பர் விலை தொடர்பான தனது நிலைப்பாட்டை இணைத்து பார்க்க வேண்டாம் என்றார்.