புதுதில்லி, ஜூலை 28- வேலையில்லா இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினைப் பறித்திடும் விதத்தில் உள்ள “அக்னி பாதை” திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலி யுறுத்தினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நாடா ளுமன்ற நடத்தை விதிகள் 377-ஆவது பிரிவின் கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: வேலை தேடும் படித்த இளைஞர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிலைத்தன் மையுடைய வேலைவாய்ப்பினை கைவிடும் அரசின் முன்மொழிவான “அக்னி பாதை” திட் டத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
ஒன்றிய அரசில் மொத்தம் உள்ள 40.78 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பான்மையான காலிப்பணியி டங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பிரிவுகளில் உள்ளன. இந்திய தேசிய மாதிரி சர்வே அமைப்பின் அறிக்கையின்படி 24.3 லட்சம் என்ற அளவுக்கு எல்லா ஒன்றிய / மாநில துறைகளில் குறுகிய கால ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இத்த கைய வேலையில்லா பிரச்சனையுள்ள தற் போதைய காலகட்டத்தில் இதைப் போலவே ஒப்பந்த வேலைவாய்ப்பு வடிவமைப்பினை “அக்னி பாதை” என்ற பெயரில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. இது முறையான வேலை வாய்ப்புகள் என்ற இடத்தில், குறைந்த செலவில் படைவீரர்களை பணியமர்த்துதல் என்ற நட வடிக்கையை பலப்படுத்துவது அன்றி வேறில்லை. இதுபோன்ற சூழலில் தொழிலா ளர்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது என்று சிந்திப்பதற்கு இய லாமல், தொழிலாளர்களின் வரையறுக்கப் பட்ட உரிமைகளின் மீது குறைந்தபட்ச ஊதி யங்களையும் மற்றும் பெறக்கூடியவைகளை யும் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக் கின்றார்கள்.
இந்த “அக்னி பாதை” திட்டத்தின்படி வருடந் தோறும் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப் படுவார்கள். நான்கு வருட சேவைக்குப் பிறகு இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் முறையான இராணுவ சேவை களுக்குள் இணைக்கப் படுவார்கள். இந்த 25 விழுக்காடு அக்னி வீரர்கள் தேர்ந்தெடுத்த லுக்கு, நேர்முகத்தேர்வுகள், உடல்தகுதி சோத னைகள் முதலான வழிமுறை விதிகளும் இல்லை. “அக்னிபாதை” திட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட மீதமுள்ள நபர்கள் வெளியேற்றப் படுவார்கள். இம்முறை, ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் ஆயுதப்படை பிரிவுகளுக்குள், நிரந்தர சேவை பணியாளர்களின் எண்ணிக் கையை குறைத்து விடும். இது, மிக முக்கிய மாக இராணுவ சேவைகளின் ஒழுங்குமுறை மற்றும் நியமனங்களுக்கான தொழில்முறை மற்றும் தனிப்பட்ட அர்ப்பணிப்பு ஆகிய வற்றுக்கு பதிலாக, மதம், சாதி மற்றும் சித் தாந்தங்களோடு உறவுள்ள முன்னுரிமைகளில் பெரும்பாலும் மூழ்கிப்போன நிலப்பிரபுத்துவ விசுவாசத்தை உற்பத்தி செய்யும். எனவே இந்த “அக்னிபாதை” திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார். (ந.நி.)