கார்ப்பரேட்கள் ஒரு நாட்டிற்குள் புகுந்து நாட்டின் வளங்களை சட்டப்பூர்வமாக எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதை, ஒரு குடும்பத்தை நாடாக வும் குடும்ப உறுப்பினர்களை அதிகார பீடங்களாகவும் படிமங்களாக்கி, அரசியல் நையாண்டியோடு விவரிக்கிறது “வாழ்க மெக்சிகோ!” என்ற படம். பாரம்பரிய ரியாஷ் குடும்பத்தின், பாட்டன் டான் பிரான்ஸிஸ்ஹோ, பாட்டி பாஸ்ஹூவாலா. இவர் களுக்கு ரெஜினோ(ஊர் மேயர்), ரோஷண்டோ மற்றும் அம்புரோஷியோ (திருத்தந்தை)என்ற மூன்று ஆண் பிள்ளைகள்.இவர்களில் நடுமகன் ரோஷண்டோ.இவனது மனைவி தோர்ஸ்.இவர்களுக்கு ஏழு பிள்ளைகள்.எழுவரில்,ஒரு திருநங்கை,மூன்று ஆண்,மூன்று பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளில் ஒருவன் பாஞ்சோ படித்த வன். இவன் மெக்சிகோ சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிகிறான். தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்தமைக்கு பிரதிபலனாக மேலாளர் பதவி உயர்வு விரைவில்.
கிரெடிட் கார்டில் நுகர்வு பொருட்களை வகை தொகையில்லாமல் அனுபவிக்கும் மனைவி மேரி மற்றும் பள்ளி செல்லும் இரு குழந்தைகளோடு மத்திய தர வாழ்க்கையை நடத்துகிறான். 120 வயதான பாட்டன் டான் பிரான்ஸிஸ்ஹோ இறக்க, தந்தையின் கட்டாயத்தின் பேரில், இறுதிச் சடங்கு செய்ய குடும்பத்தோடு கிராமத்திற்கு செல்கி றான் பாஞ்சோ. இறுதிச் சடங்குகளுக்குப் பின், தேவா லயத்தில் பாட்டனின் உயில் குடும்பத்தார் முன் வாசிக்கப்படுகிறது. கொள்ளு பேரன், கொள்ளு கொள்ளு பேரன் களுக்கு தலா 20 பெசோ, பேரன்களுக்கு கழுதை,மாடு, வான்கோழி மற்றும் மூன்று பன்றிகள்,ஒரிரவு தனக்கு மறக்கமுடியா நினைவை கொடுத்த பாஞ்சோ தாயும் மருமகளுமான தோர்ஸூக்கு Virgin Gaudalupe Medal, அரசியல்வாதியான மேயருக்கு நன்னெறி புத்தகம்,திருத்தந்தைக்கு “Our Father and three Hail Mary’s” படம் என அசையும் சொத்துகள் உயி லில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மலைக் குன்றுகளுக்கிடையே உள்ள தங்கத் தாதுக்கள் புதைந்துள்ள நிலப்பரப்பு, தூர்ந்து போன தங்கச் சுரங்கம், வீடு மற்றும் தங்கக் கட்டிகள், காசுகள் நிறைந்த பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட சொத்துக்களின் வாரிசாக பாஞ்சோ நியமிக்கப்பட்டுள் ளது தெரியவருகிறது.
சொத்துகளை இதுவரை பாதுகாத்த குடும்பத்தின ரில் எவரையும் பரிசீலிக்காமல், நெடுங்காலமாக ஊரை விட்டுப் போன பாஞ்சோவை வாரிசாக்கியதை கண்டு அனைவரும் கடும் வெறுப்படைகின்றனர். பாசத்தைப் பரிமாறியவர்கள், இப்போது சூதாகப் பார்க்கின்றனர். சொத்தை அபகரிக்க உறவுகள் வஞ்சக மாக திட்டமிடுகிறார்கள். பாத்தியப்பட்ட பாஞ்சோ, முறையாக அவன் வசமாக்க முயற்சிக்கிறான். ஆனால் சொத்தோ,களத்திலே இல்லாத அமெரிக்க, கனடா கார்பரேட் கம்பெனிகள் வசமாகிறது.இது எப்படி சாத்தி யமானது என்பதே மீதிக்கதை. பாஞ்சோ வீட்டு பணிப்பெண் விகாரத் தோற்றமு டைய பேராசைகாரனான, பாஞ்சோவின் அண்ண னோடு வாழப் போவதாக கூறுகிறாள். அதற்கு பாஞ்சோ, “கடவுள் படைத்ததை, சாத்தான் இணைத்துள்ளது” எனப் போகிற போக்கில் பேசுவது போன்ற சூழ லுக்கேற்ற பரிகாசமான வசனங்கள் படத்தின் சுவா ரசியங்கள். தேவாலயத்தில் குடும்பத்தினர் கூடி,விவிலி யத்தை முறையாக அறிந்த திருத்தந்தை அம்புரோ ஷியோவிடம், பாஞ்சோவினுடைய தங்கத்தை அப கரிக்க யோசனைகள் கேட்பர். அதற்கு, “ஈலீஸ், அவ ரது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தது, புனித லாரன்ஸ், நெருப்பில் சிக்கி உடலுறுப்பு எரிந்தது” போன்ற பைபிள் கதைகளை உதாரணமாக சொல்லி, பாஞ்சோ குடும்பத்தாரை அழிக்கின்ற யோசனை களைக் கூறுவான். இக்காட்சி, விவிலியம், தேவாலயம் சதியாலோசனைக்கு பயன்படுத்தப்படுவதை சங்க டத்தோடு சொல்கிறது.
திருடும் கூட்டத்தை நோக்கி பாஞ்சோ சுடும் போது, உடன்பிறந்த திருநங்கையின் காதலன் இறக்கிறான். பிணத்துக்கு திருத் தந்தை ஜெபிக்கையில், தங்கம் தேடி நிலத்தை தோண்டுகின்ற செய்தி வரும். உடன் திருத்தந்தை மற்றும் காதலி உள்ளிட்ட இறுதி மரி யாதை செலுத்தும் அனைவரும், பிணத்தை அநாதை யாக போட்டுவிட்டு தங்கம் தேடி ஓட்டமெடுப்பர். தங்கத்துக்கு முன் தொப்புள்கொடி உறவெல்லாம் பொருட்டேயல்ல என்பதை இக்காட்சி உணர்த்துகிறது. மேயர், தனது அண்ணன் மகனான பாஞ்சோ விடம், “மாறுகின்ற சூழலில் PRI கட்சி மக்களுக்குரிய சேவையை செய்யாமல், லஞ்ச ஊழலில் திளைத்தி ருப்பதால், PAN கட்சியில் இணைந்தேன். இதுவும் அக்கட்சி போலத்தான் உள்ளது. ஆனால் இக்கட்சி யில் உள்ளவர்கள் கபடக்காரர்களாக இருந்தாலும் கடவுளுக்கு பயப்படுகிறவர்கள். மேலும் அதிபர், நான்காம் தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வந்து ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்” எனத் தான் கட்சி மாறியதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். இது, உல கிலுள்ள முதலாளித்துவ கட்சிகள், வெவ்வேறு பெயரில் இருந்தாலும், ஒரேத் தன்மையானவைகளே, என்பதை சிரிப்பாக உணர்த்துகிறது
. இருபதாண்டுகளுக்கு முன் நடந்ததாக கதை கட்டமைக்கப் பட்டுள்ளது.அக்காலக்கட்ட மெக்சிகோ மக்களின் வாழ்வியலை அப்படியே நம்முன் நிறுத்தி யுள்ளனர்.கிராம,நகர வீட்டமைப்பு, தேவாலயம், மதுக்கூடம் உள்ளிட்ட செயற்கைத் தன்மையற்ற அரங்க அமைப்புகள், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் போன்றவைகள் குறை காண முடியா வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்போன்ஸோ ஹெரரா, பாஞ்சோவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரோஷண்டோ, அம்புரோஷியோ மற்றும் ரெஜி னோவா ஆகிய மூன்று பாத்திரங்களையும் டேமியன் ஆல்ஹாஷரே ஏற்று வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்துள்ளார். சொத்து பிரிப்பதற்கான உயில் படிக்கை யில் மற்றனைத்து பாத்திரங்கள் காட்டும் வெறுப்பு முக பாவங்கள் மூலம் அழகிய நடிப்பை தந்துள்ளனர். பொதி சுமக்கும் கழுதை, படக்கதாபாத்தி ரங்களோடு படம் முழுதும் குறியீடாக வந்து கொண்டே யிருக்கிறது. மஞ்சள் வண்ணத்தை பிரதானமாக்கிய சிறப்பான ஓளிப்பதிவு. கதைத்திருப்பத்தின்போது தோன்றும் இசை குழுவினரின் பாடல்கள் மற்றும் மண் வாசனையுள்ள பின்னணி இசை. மூன்று மணி நேரம் நகர்ந்ததே தெரியாத வகையில் உருவாக்கப்பட்ட விறு விறுப்பான திரைக் கதை. பாஞ்சோவிற்கு அடிக்கடி வரும் கனவுகளோடு கதையை நேர்கோட்டில் அழைத்து செல்லும் சலிப்பு தராத படத்தொகுப்பு. பாட்டன் பாட்டி இரக்கமற்ற கார்ப்பரேட் ஆகவும், இவர்களின் மூன்று பிள்ளைகளில் ஒருவனான மேயர், அரசு அதிகார மையத்தையும், மேயரின் பாதுகாப்பு கர்னல்,காவல் அடக்குமுறை மையமாகவும்; திருத்தந்தை அம்புரோஸ் மத பீடமாகவும்; ரோஷண்டோ தேசப்பற்றாளனாகவும் மற்றும் இவனது மனைவி சிறந்த தாயாகவும்; இவர்களுடைய ஏழு பிள்ளைகள் சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினரை குறிக்கின்ற படி மங்களாக சித்தரித்து படத்தின் தரத்தை உயர்த்தி யுள்ளார் இயக்குநர் லூயிஸ் எஸ்ட்ரடா. இவர் மெக்சி கோவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். இறுதியில், சொத்து என்ற ஆசையை காட்டி, வகித்த வேலையில் பதவியும் இறக்கப்பட்டு எதுவும் இல்லாமல் செய்த தன் பாட்டனின் கல்லறை பீடத்தில், மலம் கழித்து கோபத்தை வெளிப்படுத்துகிறான் பாஞ்சோ. சொத்தை அபகரித்த கார்ப்பரேட் மீது தார்மீக கோபத்தை பார்வையாளர்களுக்கு உண்டாக்கிய இப்படம், ஒரு வெற்றி படமே. 2023 இல் வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸில் உள்ளது.