tamilnadu

img

முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும்

சென்னை, டிச. 27 - அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர் பாக தமிழக முதலமைச்சர் அழைத்து பேச  வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்  செயல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்ட சலுகை களை திரும்ப வழங்க வேண்டும், ஒப்பந்தம்,  புறஆதாரமுகமை (அவுட்சோர்சிங்) முறை களை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும், அரசாணை 115, 139, 152 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டு சிறப்பு காலமுறை ஊதியம்,  தொகுப்பூதியம் பெறுவோரை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வா யன்று (டிச.27) தமிழகம் முழுவதும் உள்ள  அரசு அலுவலகங்களில், தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக, தென்சென்னை மாவட்டம், கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத்  தலைவர் மு.அன்பரசு கலந்து கொண்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் திரும்ப வழங்கப்  படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில  மாநாட்டில் பேசிய முதலமைச்சர், மிக விரை வில் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை கள் திரும்ப வழங்கப்படும் என்றார். இந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜாக்டோ-ஜியோ நடத்திய மாநாட்டில் பங்கேற்ற முதல மைச்சர், மிக விரைவில் அறிவிப்புகள் வெளி யிடப்படும் என்றார். அரசுத்துறைகளில் 6 லட்சம் பணியிடங்  கள் காலியாக உள்ளன. ஆனால், ஒருவரை  கூட நிரந்தர அடிப்படையில் நியமிக்க வில்லை. மாறாக, அரசாணை 115 அடிப்படை யில் அத்துக் கூலிகளாக, தனியார் கம்பெனி களை உருவாக்குவது போல் ஆட்களை நிய மிக்கின்றனர். 

ஆகவே, முதலமைச்சரின் கவனத்தை  ஈர்க்கும் வகையிலும் தமிழகம் முழுவதும்  ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பிப்.10 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பேரணியும், மார்ச் 28ந்  தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்  நடைபெறும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், பட்ஜெட் கூட்டத் தொட ரின் போது தலைமைச் செயலகத்தை முற்று கையிடுவோம். எனவே, தமிழக முதல மைச்சர் அழைத்துபேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வடசென்னை மாவட்டம், ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.செல்வம், “முதலமைச்சர் அறிவித்தபடி பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக முடக்கப் பட்டுள்ள சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். நிதிசாரா கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ம. அந்தோணிசாமி உள்ளிட்டோர் பேசினர்.