தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் தடை போடுகிறது பாஜக அரசு!
அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்
திருவள்ளூர், ஜூன் 24 - தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் பாஜக அரசு தடை போடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரி வித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சிறு பான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், “தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளு நர் மூலம் பாஜக அரசு தடை போடுகிறது. ஆளுநர் ரவி வந்ததில் இருந்தே உயர் கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார். அனைத்து தடை களையும் முறியடித்து உயர் கல்வித்துறையை உச்சத் துக்குக் கொண்டு செல்வோம்” என்றார். மேலும், “பாசிச வெறிப் பிடித்த பாஜக தமிழ் நாட்டையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் வஞ்சிக்கிறது. கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோ தாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. மசோதாவுக்கு ஒப்பு தல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். நானும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்க வில்லை. எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நாடக கம்பெனிகள் எத்தனை பேர் களத்தில் நின்றாலும், அரசியல் களத்தில் கதாநாயகன் மு.க. ஸ்டாலின் தான்” என்று தெரிவித்தார்.