மதுரை, ஜன.4- மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள இரும் பாடி பகுதியில் நெல்கொள் முதலுக்கு விவசாயிகளுக்கு முறையாகப் பணம் வழங்கா ததை கண்டித்து சோழவந்தா னில் உள்ள வாடிப்பட்டி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி களை முற்றுகையிட்டு விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கருப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தமி ழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள் முதல் செய்து வருகிறது. இந் நிலையில் கடந்த காலங்களில் நெல் அறுவடை செய்து கொள் முதல் செய்யப்பட்டது. இதற்கு முறையாகப் பணம் வழங்கக்கோரி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கிருந்து அதிகாரியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்ட னர். பின்னர் கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சோழவந்தான் போலீசார் அதிகாரிகளிடமும் விவசாயிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். விவசாயிகள் கூறுகை யில், அதிக அளவில் கடன் வாங்கி இயற்கை சீற்றங் களை கடந்து தற்போது நெல் அறுவடை செய்து அதனை வியாபாரிகளுக்கு வழங்கா மல் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு தர வேண்டிய பணத்தை முறை யாக தராமல் காலம் தாழ்த்தி யும் தற்போது குறைவான பணமும் வழங்கி வரு கின்றனர். விவசாயிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. இது சம்பந்தமாக தமி ழக அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.