tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில்  தமிழ்நாடு வருவாய்த்துறை  கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.19-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் கிராம உதவியாளர் கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய வருவாய் கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் கேஆர். முத்துவேல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆர். பாலசுந்தர் முன்னிலை வகித்தார். வட்டப் பொருளாளர் தமிழ்செல்வன், வட்டத் துணைத் தலைவர் ஏ.முத்து, திருத்துறைப்பூண்டி சரக அமைப்பாளர் எஸ். அரவிந்தன், வட்ட துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் சங்கத்தின் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக-பாஜக கூட்டணியை சிறுபான்மையினர் நம்ப மாட்டார்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர், ஏப்.19-  அதிமுக - பாஜக கூட்டணியைச் சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.  தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அதிமுக - பாஜக கூட்டணியால் சிறு பான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூறுவது, பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்பது போன்றது. இக்கூட்டணியை சிறுபான்மை யினர் நம்பமாட்டார்கள். அதிமுகவை சேர்ந்த 50 ஆண்டுகால இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர் மிகுந்த மன வருத்தத்துடன் கட்சியை விட்டு வெளியேறியுள்ளதே இதற்கு சாட்சி.தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணியில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் பல லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் அதிக அளவில் இணைகின்றனர். இதற்கு நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் திட்டங்களே காரணம்” என்றார். இக்கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் உள்பட 15-க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை:  கடைகளுக்கு அபராதம் விதிப்பு

தஞ்சாவூர், ஏப்.19-   தமிழகத்தில் புகையிலை பொருட்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில் வல்லம் பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து வல்லம் கடைத்தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.14,500 அபராதமாக விதிக்கப்பட்டது.  இந்த சோதனையில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அகேஸ்வரன், வல்லம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்கொண்டனர். மீண்டும் இதே போல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்  தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூர், ஏப்.19-  தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கி யது. இக்கோயிலின் கருவ றையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப் பட்டது. இதனால், கரு வறையில் உள்ள அம்பா ளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. மூலவராக புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) தைலாபிஷேகம் நடைபெறும். அதன்படி, தை லாபிஷேகம் வெள்ளிக் கிழமை தொடங்கியது. தொ டர்ந்து ஜூன் 4 அன்று வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல், இரவு 7.30 மணி வரையும் என இரு வேளைகளில் அம்பாளுக்கு தைலாபிஷேகமும், சகஸ்ர நாம அர்ச்சனையும், தீபாரா தனையும் நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடு களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ. கவிதா, செயல் அலுவலர் பெ. சத்தியராஜ், கண்கா ணிப்பாளர் ரவி உள்ளிட் டோர் செய்து வருகின்றனர்.

குடவாசலில் மாவட்ட அளவிலான  கராத்தே போட்டி

திருவாரூர், ஏப்.19-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், கடகம்பாடி யில் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவி லான கராத்தே போட்டி, ஆலன் திலக் கராத்தே பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்றது. குடவாசல் ஒன்றிய பகுதியில் இருந்து 68 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். கராத்தே பயிற்சியாளர் இரவி. பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். போட்டி நடு வர்களாக சென்னை தணிகைமலை, ராஜேஷ் மற்றும் மாஸ்டர்  சந்திரமோகன் ஆகியோர் செயல்பட்டனர். குடவாசல் வட்டார கல்வி அலுவலர் க.குமரேசன்  போட்டியை துவக்கி  வைத்தார். முன்னதாக, பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா, ஆலத்தூர் மருத்துவர் மருதவாணன், சமூக ஆர்வ லர் பாவா.சுதாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குடவாசல் ஒன்றியச் செயலாளர் கஞ்சமலை, ஆசிரியர் கோ. பிளாட்டோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடவாசல்  வட்டார கல்வி அலுவலர் க.ஜெயலட்சுமி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி னார். மாஸ்டர் சந்திரமோகன் நன்றி கூறினார்.