கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமைப் பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்தில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் நிதியை தர முடியாது என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந் திர பிரதான் அறிவித்து உள்ளதை கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பகிர்ந்து நிதி ஒதுக்கப் படுகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி, மும் மொழித் திட்டத்தை திணிக் கும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால்தான் நிதி என்பது ஏற்புடையதல்ல. ஒத்திசைவு பட்டியலில் கல்வி இருக்கும் போது, ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை மாநில அரசு கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கூட்டாட்சி, மொழி பன்மைத் துவத்திற்கும் எதிரானது.
ஒன்றிய அமைச்சர் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி கை யெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசு தலைவர், பிரத மருக்கு மனு அனுப்பப் படும். ஒன்றிய அரசின் நிதி மறுப்பு தொடர்ந்தால், ஒட்டு மொத்த ஆசிரியர்களும், மாணவர்களின் கல்வி நல னுக்காக குரல் கொடுப் பார்கள்; போராட்டங்களில் ஈடுபடுவார்கள். ஆசிரியர் கழகம் தனித்தும், கூட்டு இயக்க நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.