ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திட்டமிட்டு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இழிவுபடுத்தி பேசியதைக் கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெஃபி) சார்பில் தி.நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பு மாநிலத் தலைவர் தமிழரசு தலைமையில் வியாழனன்று (மே 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி,.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் என்.ராஜகோபால்,வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.