ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமே, கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை நீண்ட காலத் திற்கு தொடரும். கொரோனா பெருந்தொற்று நம்மிடையே பல வருடங்கள் இருக்கப் போகின்றது. சாதாரண காய்ச்சல் மற்றும் சளிக்கு எடுத்துக் கொள்ளும் தடுப்பூசி களை போன்றே கொரோனா தடுப்பூசியையும் கருத வேண்டும் என்றார்.
புதுதில்லி, டிச.25- இந்தியாவில் ஒமைக்ரான் தொற் றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில் பரவி வரு கிறது. தொற்று பரவல் சூழலுக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள் ளது. இந்த நிலையில் நாட்டில் ஒமைக் ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 415 ஆக அதி கரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநி லத்தில் 108 பேரும், தில்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக் ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கேரளத்தில் 37 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், ராஜஸ்தா னில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர ஹரியானா, ஒடிசா, ஆந்திரத்தில் தலா நான்கு பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கத் தில் தலா மூன்று பேரும், உத்தரப்பிர தேசத்தில் இரண்டு பேரும், சண்டிகர், லடாக், உத்தரகண்டில் தலா ஒரு வரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதுவரை 115 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து குணம டைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் மாறுபாட்டால் பாதிக் கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், மூன்று பேர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், ஏழு சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என ஒன்றிய அரசின் பகுப்பாய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரை பதிவாகி யுள்ள ஒமைக்ரான் கொரோனா பாதிக்கப்பட்ட 358 பேரில் 183 பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்தார். ஒமைக்ரான் தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள பத்து மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கேரளம், மகா ராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகியவையே அந்த மாநி லங்கள் ஆகும்.