tamilnadu

img

நவ. 8 - அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக். 31 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆ‌.செல்வம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை உரையாற்றினார். பொதுச் செயலாளர் ஆ.செல்வம் கடந்த கால  நடவடிக்கைகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர் பாஸ்கரன் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.  கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணி யிடங்களை அழித்திடும் அரசாணை - 152ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்து ணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். டி.ஏ. சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.

ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 8 ஆம் தேதி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில்  தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் மொ.ஞான தம்பி, ஆ.பெரியசாமி, கோ.பழனியம்மாள், சி.எஸ்.கிறிஸ்டோபர், சி.பரமேஸ்வரி, மு.செல்வராணி, மாநில துணை பொதுச் செயலா ளர்கள் என்.வெங்கடேசன், தெ.வாசுகி, மாநில செயலாளர்கள்  சா. டேனியல்ஜெயசிங், உ.சுமதி, ச.ஹேமலதா, ரா.கோதண்ட பாணி, அ.குபேரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ் நன்றி கூறினார்.