ஈரோடு, டிச. 16- பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் முறையீட்டை நடத்துவது என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தீர்மானித்துள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க பவள விழா மாநில மாநாடு ஈரோடு ஏ.எம் மஹாலில் அமைந்த எம்.எஸ்.அன்வருள் ஹக் நினைவரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ.சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலா ளர் மு.சீனிவாசன் வரவேற்றார். முன்ன தாக, தோழர் ஆர்.முத்துசுந்தரம் நினை வுச் சுடர் ஏந்திய கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார். கல்வித்துறையைக் காத்திடும் அமைச்சு பணியாளர்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் கா.அறிவொளி கருத்துரை ஆற்றி னார். வேலை அறிக்கை, நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து விவாதம், தொகுப்புரை இடம் பெற்றது. மாநாட்டில், தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் கு.வெங்க டேசன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் கு.கும ரேசன், தமிழக அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ம.அர்ஜூன், பள்ளிக் கல்வி அலுவலர் ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் க. லட்சுமணன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இரா.மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தீர்மானங்கள்
டிசம்பர் 28ல் நடைபெறும் ஜாக்டோ - ஜியோ சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் பெருந்திர ளாக பங்கேற்பது; பிப்ரவரி 21ஆம் தேதி சென்னை டி பி ஐ வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத் தை நடத்துவது என மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு உரையாற்றினார். முடிவில், வரவேற்புக் குழு செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில், தலைவராக பொன்.ஜெயராமன், மாநில பொதுச் செயலாளராக நா.வினோத்குமார், மாநில பொருளாளராக ச.விஜயமனோகரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.