tamilnadu

img

கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்க தமிழகமும் - கேரளமும் இணைந்து போராடும்!

கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்க தமிழகமும் - கேரளமும் இணைந்து போராடும்!

அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு மதிப்பதாக இல்லை

இந்திய அரசியலமைப்பு முன்வைக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டையே அழிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கும்  நிலையில், அதனை எதிர்த்து முறியடிக்கும் போராட்டங்களை  தமிழகமும் - கேரளமும் இணைந்து நடத்தும் என்று சிபிஎம்  அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கில் தலைவர்கள்  முழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில  இந்திய மாநாடு மதுரையில் சீத்தாராம் யெச்சூரி நகரில்  (தமுக்கம் மைதானம்) புதனன்று (ஏப்ரல் 2) தொடங்கியது. இந்த மாநாடு வரும் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாட்டின் ஒருபகுதியாக, “கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் வியாழனன்று (ஏப்ரல் 3) மாலை, ராஜா  முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கருத்த ரங்கில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். அப்போது, ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சிக் கோட் பாட்டைச் சிதைக்கும் வகையில், மாநிலங்களுக்கு உரிய  வரிப் பகிர்வை வழங்க மறுப்பது, குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மீது, புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கை என்ற பெய ரில் மறைமுகமாக இந்தியையும் திணிப்பதை, தலைவர்கள்  கண்டித்தனர். பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தான் கல்விக்கான நிதி வழங்குவோம் என மிரட்டுவதையும் அதே போல மக்கள் தொகை கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த மாநி லங்களை வஞ்சிக்கும் வகையில் தன்னிச்சையாக தொகுதி  மறுவரையறை எனும் வஞ்சகத்தை தென்மாநிலங்களுக்கு எதிராக அரங்கேற்றுவதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இவை அனைத்  தையும் ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது என  குற்றம் சாட்டிய தலைவர்கள், இதனை தமிழ்நாடு, கேரளம்,  கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள்  கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அந்தப் போராட்  டத்தை மேலும் வலுப்படுத்துவோம்; ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களை முறியடித்து, கூட்டாட்சி கோட்பாட்டை நாட்டில் நிலைநிறுத்துவோம் என்றும் உறுதிபடத் தெரி வித்தனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் கே.  பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மக்க ளவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பி னர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், துணைமேயர் தி. நாக ராஜன், திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வரவேற்க, புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் நன்றி கூறினார். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பெண்கள் குழுவின்  சிங்காரி மேள நிகழ்ச்சி நடைபெற்றது.