‘தொழில் அமைதி அவசியமானது; மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில் உறுதியுடன் உள்ளோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 24 - தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற் சாலைகள் திருத்த சட்ட முன்வடிவு ஏப்ரல் 21 அன்று கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப் பட்டது. வேலைநேரத்தை 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வரையறை செய்யும் இம்மசோதா, முற்றிலும் தொழிலாளர் விரோதமானது என்றும், அதை திரும்பப் பெற வேண்டும் எனவும் மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பிலும் இடதுசாரிக் கட்சிகள் சார்பிலும், இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தன்னெழுச்சியாக கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு திங்களன்று (ஏப்.24) பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பர சன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் எல்பிஎப் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி., பொரு ளாளர் நடராஜன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏடிபி பேரவை பொதுச் செயலா ளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி மா இராசு, ஏஐடியுசி தேசியத் தலைவர் மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் இராதாகிருஷ்ணன், ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ஜெகநாதன், மின்சார பிரிவு தலைவர் சேவியர், சுப்பிர மணியம், எச்எம்எஸ் மாநிலத் தலைவர் சுப்பிர மணியம், எம்எல்எப் மாநிலத் தலைவர் அந்தோரி தாஸ், எல்எல்எப் மாநிலத் தலைவர் பேரறிவழ கன், ஏஐடியுசிசி மாநிலத் தலைவர் இரணியப் பன், ஏஐயுடியுசி மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், சேம நாராயணன் (மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம்), சுவாமி (ஆம் ஆத்மி தொழிற்சங்கம்), கீதா,லீலாவதி (அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்) மற்றும் குசேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் இடையே செய்தி யாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், இந்த மசோதா மிகவும் அபாயகரமானது என்றும் அதை விரிவாக அமைச்சர்களிடம் எடுத்துரைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார். தொழிற்சங்கத் தலை வர்கள் தெரிவித்த கருத்துக்களையும் உணர்வு களையும் முழுமையாகவும் உடனடியாகவும் முதலமைச்சரிடம் கொண்டுசெல்வோம்; அவர் நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர்கள் கூறிய தாகவும் அ.சவுந்தரராசன் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் சந்திப்பு
இதனிடையே திங்களன்று மாலை 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இப்பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், தி.க. தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலை வர்கள் கே.எஸ்.அழகிரி, கு.செல்வப்பெருந்த கை, விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ஐயுஎம்எல் தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து முறையீடு செய்தனர். அப்போது அவர்கள் அளித்த கடிதத்தில், “தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கு முற்றி லும் எதிராக உள்ள இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். முதல் கட்டமாக சட்டத்தை செயல்படுத்துவதற் கான நடைமுறைகளை நிறுத்தி வைப்பதோடு, சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
முதல்வர் அறிவிப்பு
இந்த பின்னணியில், ‘தொழிலாளர் நலத் துறையின் சட்ட முன்வடிவு மீதான செயலாக் கம் நிறுத்திவைக்கப்படுகிறது’ என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின் விபரம் வருமாறு: தொழிலாளர்களின் நலனைப் பாது காக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த 21-4-2023 அன்று ‘‘2023-ஆம் ஆண்டு தொழிற்சாலை கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)’’, தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் திங்களன்று (24-4-2023) பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)’’- என்ற சட்டமுன்வடிவின் முக்கிய மான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப் பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலை களுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீல னைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும்,
தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக் கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி மிகுந்த அக்கறைகொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள் ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதி களிடம் அமைச்சர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப் படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
தொழில் அமைதி அவசியமானது
ஒரு நாட்டின் தொழில் வளம், பொரு ளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றை யொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய வற்றைப் பேணுவதும் அரசின் நோக்க மாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப் பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத் தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும்.
கலைஞரின் தனிக்கவனம்
1969-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நல னில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ‘‘தொழில், தொழி லாளர் நலம், கூட்டுறவு’’ என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித் துறையையும், தனி அமைச்சகத்தை யும் உருவாக்கியது; இரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதா யம் பெற்ற உரிமைகள் குறித்த வர லாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது; 1969-ல் அவசரச் சட்டம் பிறப் பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது; பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல் லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது; தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள் ளது போல் ‘பணிக்கொடை’ வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது; விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவா ரண நிதித் திட்டத்தை உருவாக்கியது;
நலவாரியங்கள்
கட்டுமானத் தொழிலாளர் நலவாரி யத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், விவ சாயத் தொழிலாளர் நலவாரியம், மக ளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளி கள் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நல வாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்பு சாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது திமுக அரசு; 1990-ஆம் ஆண்டு மேதின நூற்றா ண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு ‘மேதினப் பூங்கா’ எனப் பெயரிட்டு, மேதின நினை வுச் சின்னத்தை நிறுவியர் கலைஞர். வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகைத் திட்டத்தை அறிமுக ப்படுத்தியது திமுக அரசு தான். முந்தைய கழக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (Confederation Of Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாது காப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டா வது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதும், கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருந்தொழில் நிறு வனங்கள் முதலீடுகள் செய்து, அதன் மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பு
சுயமரியாதைச்சுடர் தந்தை பெரி யார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லா லும், செயலாலும், எழுத்தாலும் தமிழ் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக் களின் அடிப்படையில், ‘‘2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேர வை சட்டமுன்வடிவு எண்.8/2023)’’ என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நட வடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.