tamilnadu

img

தமிழக அரசின் ஆகம கமிட்டி பட்டியல் நிராகரிப்பு அர்ச்சகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய உச்சநீதிமன்றம்

தமிழக அரசின் ஆகம கமிட்டி பட்டியல் நிராகரிப்பு அர்ச்சகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய உச்சநீதிமன்றம்

புதுதில்லி, செப். 26 - ஆகம கோவில்களைக் கண்டறி யும் குழுவுக்கு அர்ச்சகர்கள் விரும்பிய நபரான பொம்மபுரம் ஆதீனம் (மயி லம்) சிவஞான பாலயாவையே உறுப் பினராக நியமிக்குமாறு உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. தமிழக அரசு நியமித்த சத்திய வேல் முருகனார், முருகவேல், சரவ ணன் ஆகியோரை ஏற்க முடியாது என்று அர்ச்சகர்கள் பிடிவாதமாக இருந்த நிலையில், அவர்களின் நிலைபாட்டையே உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகமக் கோவில்களை கண்டறி யும் கமிட்டிக்கு, தமிழக அரசு நியமித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் என்ற பெய ரில் அர்ச்சகர்கள் வழக்கு தொடர்ந்த னர். இந்த வழக்கில், சத்தியவேல் முரு கனாரை நீக்கி, வேறு ஒருவரை நிய மிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி சத்தியவேல் முரு கனாருக்குப் பதில், முருகவேல் என்பவரை தமிழக அரசு நியமித்தது. ஆனால், அவருக்கு எதிராக அர்ச்ச கர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.  அவர்களின் மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உச்சநீதி மன்றம், அர்ச்சகர்கள் தரப்பு வாதத்தை  ஏற்று, முருகவேலையும் நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, புதிதாக ஐந்து பேர் கொண்ட பட்டியலை கொடுத்திருப்பதாகவும், சரவணன் என்பவரை ஆகம கமிட்டியில் நிய மிக்க வேண்டுமெனவும் அறநிலை யத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சரவணன் என்பவரை நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்த அர்ச்சகர்கள், அந்த பட்டியலில் இருக்கும் வேறு ஒருவரை உறுப்பின ராக்க வேண்டுமென கூறினர். மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலைய சுவாமி களை கமிட்டியில் உறுப்பினராக்க ஆட்சேபனை இல்லை என்றனர். இதையடுத்து, ஆகமக் கோவில் களைக் கண்டறியும் கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலை யாவை உறுப்பினராக நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, ஆகமங்களை பின்பற்றாமல் தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும், அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசி டம் தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட னர். மேலும் வழக்கு மீதான விசார ணையையும் 2026 ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.