tamilnadu

img

குடிமனை பட்டா கோரும் பொதுமக்களின் மனுக்கள் ஒப்படைப்பு

குடிமனை பட்டா கோரும் பொதுமக்களின்  மனுக்கள் ஒப்படைப்பு

அரியலூர், ஜூலை 1-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிமனை, குடிமனை பட்டா கோரி பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மனுக்களை சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம் வழங்கினர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயங்கொண்டம் எம். வெங்கடாஜலம், தா.பழூர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்டச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.