இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா மற்றும் அணியில் உள்ள சத்யா ஆகியோர் மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்களே. ரயில்வேயில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனமும் பெற்றார்கள்.
மதுரை, ஏப்.11- தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப் பந்து பயிற்சி மையத்தை மோடி அரசு வார ணாசிக்கு மாற்றியது. இந்த உத்த ரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய விளை யாட்டுத் துறை அமைச்சர் அனு ராக் தாக்கூர், இந்திய விளையாட்டு ஆணைய பொது இயக்குநர் ஆகி யோருக்கு சு.வெங்கடேசன் எம்.பி.,அனுப்பிய கடிதம் வருமாறு: பல் வகை விளையாட்டுகளுக் கான இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் பயிற்சி மையங்கள் 37 நகரங்களில் உள்ளன. அதில் இரண்டு தமிழ் நாட்டில் உள்ளது. மயிலாடுதுறை யில் உள்ள பயிற்சி மையம், கூடைப் பந்து மற்றும் கைப்பந்துக் கான அங்கீகாரம் பெற்று பயிற்சி யையும் வழங்கி வருகிறது. இது பெண் கூடைப்பந்து வீரர்களுக் கான சிறப்பு மையம். பெண் விளையாட்டு வீரர்கள் அங்கு கூடைப்பந்து பயிற்சி பெற்று வரு கின்றனர். இதற்காக அங்கு செல்ப வர்கள் மயிலாடுதுறை பள்ளியி லேயே அனுமதி பெற்று பயின்றும் வருகிறார்கள். தற்போதைய இந்திய பெண் கள் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா மற்றும் அணியில் உள்ள சத்யா ஆகியோர் இந்த மயி லாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்களே. ரயில்வேயில் விளையாட்டுக்கான இட ஒதுக் கீட்டில் பணி நியமனமும் பெற்றார் கள். இவர்கள் 2018 இல் இந்தோ னேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்களிலும் பங்கேற்ற வர்கள். புஷ்பா நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமமான முடிகண்ட நல்லூரில் இருந்து மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்.
இப்படிப்பட்ட மயிலாடுதுறை மையத்தில் கூடைப்பந்து, கைப் பந்து பயிற்சி பெறுவதற்கு தற் போது ஆபத்து எழுந்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணை யம் (Sports Authority of India) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 518/SAI/ OPS/STC review/2022 -23/ 05.04. 2023, மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து வேறு மையங்களுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இன் னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற் சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை. அப்படியெனில் பெண் கூடைப் பந்து வீரர்கள், பயிற்சிக்கு எங்கு செல்வார்கள்? உத்தரப்பிரதேசம் வாரணாசி மையத்தில் கூடைப்பந்து பெண் வீரர்கள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளன. இல்லை யெனில் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்னந்த்கன் நகருக்கு செல்ல வேண்டும். இந்த இரண்டு ஊர் களில் மட்டுமே கூடைப்பந்து பயிற்சிக்கு பெண்களுக்கான இடங்கள் மேற்கண்ட சுற்றறிக்கை யில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை
வாரணாசியில் தமிழ்ச் சங்க மம் விமரிசையாக நடத்தப்பட்டது. கலாச்சார பாலம் அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் அறி வித்தார்கள். நமது முடிகண்ட நல்லூர் புஷ்பாக்கள் இந்த பாலத் தின் வழியாக வாரணாசிக்கு செல்ல வேண்டியிருக்கும் என அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது அங்கு மதுரை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்க னைகள் பள்ளிப் படிப்பையும், கூடைப்பந்து பயிற்சியையும் ஒரு சேர பெற்று வருகிறார்கள். மயிலாடுதுறை பயிற்சிக்காக பள்ளி படிப்பையே அந்த ஊருக்கு மாற்றியுள்ள மாணவிகளின் கதி என்ன? அணியின் கேப்டன் ஆகக் கூட உயர முடிந்த எங்கள் தமிழ்நாட்டின் புஷ்பாக்கள் எதிர்காலத்தில் வாரணாசி வரை பயிற்சிக்காக ஓட வேண்டி இருப் பதுதான் வாரணாசி சங்கமமா? தமிழ்நாட்டிற்கு இழைக்கப் படும் வஞ்சனை இது. இந்த உத்தரவை ரத்து செய்து மயிலாடுதுறையிலேயே கூடைப் பந்து, கைப்பந்து பயிற்சி மையம் தொடர வழி வகை செய்ய வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.