சென்னை, ஜன.9- அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண் டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலி யுறுத்தும் என்று ஆளுநர் உரையின் வாயிலாக மாநில அரசு கூறியுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி ஆற்றிய உரையில் “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற கலைஞர் கொள்கை நிலைப்பாட்டுடன் செயல் படும் மாநில அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அலுவல்மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கனவே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
வரி வருவாய் பகிர்வில் வஞ்சகம்
மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுத்து சரக்கு மற்றும் சேவை வரி முறையில் இணைந்தன. ஆனால், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வரிவளர்ச்சி வீழ்ச்சி அடைந் ததால், மாநிலங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்நிலையில், 30.06.2022 ஆம் நாளுடன் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்கும் காலம் முடிவடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தி லிருந்து மாநிலங்களின் வருவாய் இன்னும் முழுமையாக மீளாத நிலை யில், இழப்பீடு வழங்கும் காலத்தினை குறைந்தபட்சம் மேலும் இரண்டு ஆண் டுகளுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்துவதாக அதில் கூறப்பட் டுள்ளது.