tamilnadu

img

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கான  சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜுன் 7-  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜுன் 24 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளதாவது: இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவை பெற்றுக் கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாபநாசத்தில், கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், திருப்பாலைத் துறையிலிருந்து 108 சிவாலயம் வரையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்தச் சாலையில் ஆடுகள் போக்குவரத்திற்கு இடையூறாகச் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே ஆடுகளை சாலைகளில் மேயவிடும் ஆடு வளர்ப்போர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.