தாய் இறந்ததை மறைத்து ஓய்வூதியப் பணம் ரூ.18.30 லட்சத்தை மோசடி செய்த மகன்
தஞ்சாவூர், மே 7 - அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வந்த தனது தாய் இறந்த தகவலை தெரிவிக்கா மல், தொடர்ந்து அவரது ஓய்வூதியப் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து பயன்படுத்தி வந்த மகன் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ்குமார், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொடுத்த புகாரில், “தஞ்சாவூர் மானம்புச்சாவடி செயின்ட் அந்தோணி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி கமலா பாய். இவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று ஓய்வூதி யம் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 18.10.2021 ஆம் ஆண்டு ஜெயசீலி இறந்துள்ளார். ஆனால் அவரது வாரிசு தாரரான பிரின்ஸ் ஜோசன் இது குறித்து மாவட்டக் கருவூலத்திற்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், தனது தாய் ஜெயசீலி கமலாபாயின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கடந்த 05.05.2025 ஆம் தேதி வரை அவரது பென்சனை எடுத்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக 18,30,74 ரூபாயை பிரின்ஸ் ஜோசப் எடுத்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென” தெரிவித்திருந்தார். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வா ளர் ஸ்ரீப்ரியா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
போக்சோவில் வாலிபர் கைது
தஞ்சாவூர், மே 7 - தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டி ருந்தார். அப்போது தனது 14 வயது மகளிடம் வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதன்பேரில் அந்த சிறுமி வீட்டுக்குச் சென்று செல்போனை எடுத்துக் கொண்டு தனது அம்மா வேலை பார்த்த வயலுக்கு வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கூலித் தொழிலா ளியான ர.நளன் (24) அந்த சிறுமியை வழிமறித்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி அங்கிருந்து செல்ல முயன்ற போது செல்போன் நம்பரை கொடு என்று கேட்டு நளன் மிரட்டியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதையடுத்து நளன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது அம்மாவிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் தாய் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து, காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட தில், நளன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நளனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
அரியலூர், மே 7- அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசாத்லோடா(46). இவர், அரியலூரில் தங்கி, அங்கு சின்ன கடைவீதியில் ஸ்ரீஅரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயாரை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார். இதற்கிடையே அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த கோபால்தாஸ் மகன் கணையாலால் என்பவரை கடையில் வேலைக்குச் சேர்த்துள்ளார். இக்கடைக்கு வரும் அடகு நகைகளை, தனது தங்கையின் கணவர் விகாஸ்ஜெ யின்(49) என்பவரின் நானேஸ் பேங்கர்ஸ் அடகு கடை யிலுள்ள பெட்டகத்தில் வைப்பது வழக்கம். அதன்படி, கடந்த மே 3 அன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு பெட்ட கத்தில் நகைகளை வைக்கச் சென்ற கடை பணியாளர் கணையாலால், நகையை வைக்காமல், கைப்பேசியை அணைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, ஆசாத்லோடா நேரில் வந்து பெட்ட கத்தை பார்த்த போது, அதில் இருக்க வேண்டிய 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை கணையாலால் திருடிச் சென்றி ருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல்து றையினர், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.