tamilnadu

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

  1. சமீபத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் அடிப்படையில் காசா பகுதிக்கு அமைக்கப்படும் மனிதாபிமான  உதவி கட்டமைப்பை ஒருங்கிணைக்க நெதர்லாந்தை சேர்ந்த சிக்ரிட்காக் என்பவர் ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி. வெளியுறவு அமைச்சராகவும் உதவி பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அரேபிய தேசங்கள் குறித்து ஆழமான அறிவு கொண்டுள்ள இவரின் கணவர் அனீஸ்-அல்-அக் ஜெருசலேத்தை சேர்ந்த பாலஸ்தீன வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது. காசா மக்கள் இவரின் பணியால் நிவாரணம் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.  
  2. 19 லட்சம் மக்கள் காசாவில் இடம் பெயர்ந்து உணவுக்கு இன்னல் படுகின்றனர் எனவும் 50,000 கர்ப்பிணி தாய்மார்கள் உணவும் மருந்துகளும் இல்லாமல் துன்பப் படுகின்றனர் எனவும் உடனடியாக காசா பகுதியை பஞ்சம் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது.  
  3. இஸ்ரேல் சுமார் 80 பாலஸ்தீன உடல்களை காசாவில் உள்ள நிர்வாகத்திடம் ஒரு வாகனத்தில் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளது. அவர்கள் யார்? பெயர்கள் என்ன? எங்கு கைப்பற்றப்பட்டனர்? எப்படி உயிரிழந்தனர்? என எந்த  தகவலையும் இஸ்ரேல் தரவில்லை. மேலும் பலரது உடல் கள் துண்டு துண்டாக இருந்தன எனவும் சிலரின் அங்கங்கள் திருடப்பட்டுள்ளன எனவும் காசா நிர்வாகம் புகார் கூறியுள்ளது.
  4. காசாவில் இஸ்ரேல் தனது ராணுவ இலக்குகளை அடைய  முடியாது எனவும் ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் இழப்புகளை சந்தித்து கொண்டுள்ளது எனவும் சில இஸ்ரேலிய பத்திரிகை கள் விரக்தி வெளியிட்டுள்ளன. ஆனால் நேதன்யாகு பல ராணுவ வெற்றிகள் அடைந்ததாகக் கூறுகிறார். எது உண்மை?
  5. காசா போர் இஸ்ரேலுக்கு மேலும் 14 பில்லியன் டாலர் செலவை விளைவிக்கும் எனவும் பட்ஜெட் பற்றாக்குறை மூன்று மடங்காக உயரும் எனவும் இஸ்ரேலிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. எல்லையில்லாமல் உதவிட அமெரிக்கா இருக்கும் பொழுது இஸ்ரேல் ஏன் கவலைப்பட வேண்டும்? தங்களின் வரிப்பணம் ஏன் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் தேவையில்லாமல் செல்கிறது என அமெரிக்க மக்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்?
  6. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லீம்கள் என்றாலே வன்முறையைக் கைக்கொள்ளும் காட்டு மிராண்டிகள் எனும் பிம்பத்தை மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் கட்டமைத்தன எனவும் காசாவில் அவர்கள் சந்திக்கும் கொடூரங்கள்தான் இந்த பிம்பத்தில்  சிறிது மாற்றம் ஏற்படுத்தியுள்ளது எனவும் வெர்ல்மேன் எனும் மேற்கத்திய பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
  7.  இஸ்ரேல் ஒரு பயங்கரவாத அரசு எனவும் அது இன ஒழிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது எனவும் கியூபா ஜானதிபதி மிக்வேல் டயாஸ் குற்றம்சாட்டியுள்ளார். காசாவில் நடப்பது அனைத்து மனித விழுமியங்களுக்கும் எதிரானது எனவும் அது இன்னும் எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படப்போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  
  8. காசாவில் நிரந்தரப் போர் நிறுத்தம் தேவை எனவும் ஜோர்டானுடன் இணைந்து காசாவுக்கு மனிதநேய உதவிகள் செய்யப்போவதாகவும் பிரான்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.  
  9. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எங்கள் செய்தி இதுதான்: “மனித குலத்துக்கு எதிராக நீங்கள் பெரும் குற்றம்  இழைத்து கொண்டுள்ளீர்கள்” என தென் ஆப்பிரிக்கா வின் தேவாலய கவுன்சில் தலைவர் பிராங்க் சிகேன் கூறி யுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் தலைமையிலான தேவாலய கவுன்சில் ஜோர்டா னுக்கு வந்துள்ளது.  
  10. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்க எங்களது விமானப்படை தயாராக உள்ளது என ஏமனின் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஹவுதியின் எதிர்ப்பும் நடவடிக்கைகளும் இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளன.  uபஹ்ரைன் மேலும் மேலும் சியோனிஸ்ட் ஆதரவு நிலைக்கு ஏன் சாய்கிறது என சிறை யில் உள்ள ஷேக் அலி சல்மான் எனும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  
  11. ஹெஸ்புல்லா தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் ஆக்கிர மிப்பில் உள்ள வடக்கு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது எனவும் மக்கள் அங்கு செல்ல பயப்படுகின்றனர் எனவும் நோம் டிவியன் எனும் இஸ்ரேலி ராணுவ கமாண்டர் கூறி யுள்ளார். காசாவை போல லெபனானும் ஹெசபுல்லாவும் தரைமட்டமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாகி வருகிறது.  
  12. பாலஸ்தீன மக்களை தமது தேசங்களுக்குள் பலவந்தமாக திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் காசாவில் நிரந்தர அமைதிக்கு உலக தேசங்கள் அனைத்தும் முயல வேண்டும் எனவும் ஜோர்டானும் எகிப்தும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.  
  13. ஜெர்மனியின் இட்லருக்கும் இஸ்ரேலின் நேதன்யாகு வுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என துருக்கி ஜனாதி பதி எர்டோகன் காட்டமாக கூறியுள்ளார். எனினும் இஸ்ரேலுடன் நடக்கும் எவ்வித வணிகத்தையும் நிறுத்த எர்டோகன் தயாராக இல்லை.  
  14. காசா மக்களுக்கு கூடுதல் உதவி கொடுக்கப்பட வேண்டும் என கூறிய இஸ்ரேல் பள்ளி முதல்வரை மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இஸ்ரேலின்  மக்களில் 86சதவீதம் பேர் காசாவையும் பாலஸ்தீன மக்களையும் ஒழிப்பதை ஆதரிக்கின்றனர்.