லக்னோ, ஜன.4- “உத்தரப் பிரதேசத்தில் எனது தலைமையில்தான் ஆட்சி அமை யும்; “சமாஜ்வாத்தே (சோசலி சமே) ராமராஜியத்திற்கான வழி” என்று பகவான் கிருஷ்ணர், ஒவ்வொரு நாளும் தனது கன வில் வந்து கூறுவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். “உ.பி. முதல்வர் ஆதித்ய நாத்தை மதுரா தொகுதி வேட்பா ளராக நிறுத்த வேண்டும்” என் றும் “இதனை பகவான் கிருஷ் ணரே தனது கனவில் வந்து கூறி னார்” என்றும் பாஜகவின் எம்.பி. ஹர்நாத் சிங் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வித மாகவே அகிலேஷ் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். பஹ்ரைச் தொகுதி பாஜக எம்எல்ஏ மாதுரி வர்மா சமாஜ் வாதி கட்சியில் இணையும் நிகழ்ச்சி அகிலேஷ் தலைமையில் நடை பெற்றது.
அப்போது இதுதொடர் பாக பேசிய அகிலேஷ், ‘’ராம ராஜியத்திற்கான பாதை சமாஜ்வாத் (சோசலிசத்தின்) பாதையில் உள்ளது. எல்லா ருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலை வரும்போதே ராம ராஜி யம் அமையும். வரும் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி ஜெயித்தால் உத்தரப் பிரதேசத்தில் ‘ராம ராஜியம்’ அமைக்கப்படும். சமாஜ்வாதிதான் உ.பி.யில் ஆட்சி அமைக்கப்போவதாகப் பக வான் ஸ்ரீகிருஷ்ணர் ஒவ்வொரு இரவும் என் கனவில் வந்து சொல் கிறார். மேலும் உத்தரப்பிரதேசத் தில் ஆதித்யநாத் தோல்வி அடைந்து விட்டார், அவரை யாரும் காப் பாற்ற முடியாது என்றும் பக வான் ஸ்ரீ கிருஷ்ணர் எனது கன வில் கூறினார்” என்று குறிப் பிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சி அதிக குற் றங்களை செய்துள்ளதாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டுக் கும் பதில் அளித்திருக்கும் அகி லேஷ், “பாஜக-தான் அதிக குற்ற வழக்குகளை வைத்திருக்கும் ஆதித்யநாத்தை முதல்வர் ஆக்கி யுள்ளது. தன் கட்சியில் உள்ள குற்றவாளிகளை சுத்தம் செய்வ தற்கு பாஜக வாஷிங் மெஷினைத் தான் கொண்டு வர வேண்டும்” என்று அகிலேஷ் பதிலடி கொடுத் துள்ளார். “மாநிலத்தில் உள்ள பல ஊர் களின் பெயர்களை ஆதித்யநாத் மாற்றிவிட்டார். இவரிடமிருந்து கற்றுக்கொண்டுதான் சீனா நம் நாட்டில் உள்ள அருணாச்சல பிர தேசத்தில் பல கிராமங்களின் பெயர் களை மாற்றியுள்ளது” என்றும் அகிலேஷ் விளாசியுள்ளார்.