tamilnadu

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு

தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில், சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழன் பிரசன்னா, தஞ்சாவூர் மேயர் சன் இராமநாதன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி சார்பில் சமூக நல்லிணக்க சிறப்பு இஃப்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி, இஸ்லாமிய கலாச்சார பேரவை, விகாஸ் பொது இ சேவை மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் அப்துல் பாரி தலைமை தாங்கினார். செயலாளர் ஆன்டோ பிரவீன் வரவேற்றார். ரோட்டரி தேர்வு ஆளுநர் லியோ பெலிக்ஸ் லூயிஸ், அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.  வர்த்தக சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, ரோட்டரி சங்கம் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு. நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சங்கத்தின் பொருளாளர் முனைவர் முபாரக் அலி நன்றி கூறினார்.